Feb 11, 2022

திருச்சி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி

 


அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி ஆபிரகாம்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் அதிமுக சார்பில் நிர்மலா மேரி ஆபிரகாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் நிர்மலா மேரி. 

அந்தவகையில் இன்று தனது 46 வது வார்டுக்குட்பட்ட நேரு தெரு, சாலமன் தெரு, கருதசாமி நகர், எம்ஜிஆர் நகர், ஜே ஜே நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தனது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது பொன்மலை பகுதி அவைத்தலைவர் சாமிகண்ணு, தெற்கு மாவட்ட அம்மா பேரவை பொறுப்பாளர் TT. கிருஷ்ணன், பகுதி துணை செயலாளர் கொட்டப்பட்டு பரமசிவம், 46 வது வட்ட செயலாளர் MRV. நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்ன குமார், அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் அந்தோணி ராஜ், லூர்து மேரி என்கிற பத்மா இந்திரா, வாசுகி, உஷா உட்பட வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 10, 2022

திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் ஜெ.கவிதா பிரச்சாரம்


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் அதிமுக சார்பில் ஜெ.கவிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 


இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த கவிதா, தொடர்ந்து தனது பகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்த வகையில் இன்று 6வது வார்டுக்குட்பட்ட  தாத்தாச்சாரியார் கார்டன், மாம்பழச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர்கள் கொளஞ்சி மற்றும் தமிழரசன், கண்ணன், சாமிகண்ணு, கரிகாலன், பவர் சிங், செந்தில், கஸ்தூரி உட்பட வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்



 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 03 வது  வார்டில் அதிமுக சார்பில் ரேவதி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த ரேவதி தனது வார்டுக்குட்பட்ட கீழ அடையவளஞ்சான் தெரு, தேவி தெரு, காந்தி ரோடு, கிழக்கு ரங்கநாதபுரம், ரயில்வே குடியிருப்பு, ராஜாஜி தெரு, விக்னேஷ் பிளாட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



அப்பகுதியில் பிரபலமான இவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் ரேவதி பொதுமக்களிடம் கூறுகையில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தி தரப்படும். அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் தனது வார்டு மக்களுக்கு பெற்று தரப்படும். மேலும் எண்ணற்ற திட்டங்களை தனது வார்டில் செயல்படுத்த பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவரியார், கலைவானன், கிருஷ்ண வேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Feb 9, 2022

அதிமுக வேட்பாளர் கரும்புச்சாறு கொடுத்து பிரச்சாரம்

 


வார்டு பகுதி மக்களுக்கு கரும்புச் சாறு  எடுத்து கண்ணாடி குடுவையில் கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி


 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். 


இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வார்டு மக்களுக்கு கரும்பு சாறு  கொடுத்து  வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி 9 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி பிரச்சாரம்


 திருச்சி மாநகராட்சி 9 வது வார்டில் அதிமுக வேட்பாளர் W. ராணி வெஸ்லி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 9 வது  வார்டில் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 9 வது வார்டுக்குட்பட்ட 

வண்டிக்கார தெரு, வாலாஜா தெரு, பங்காளி தெரு  உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் சுப்ரா, உறையூர் பகுதி அவை தலைவர் வெஸ்லி, IT WING செயலாளர் தாயார் சீனிவாசன், K. செல்வம், P. செல்வம், ரஜாக், ஜெய்சங்கர், பாபர் அலி, ரமேஷ், IT WING இணை செயலாளர் பாலாஜி

உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 8, 2022

திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரியா சிவக்குமார் பிரச்சாரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிகழ்வின்போது பூக்கடை ரங்கராஜ் உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 05 வது  வார்டில் அதிமுக சார்பில் கே.எஸ்.ராஜு  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 05 வது வார்டுக்குட்பட்ட


மேல கொண்டையம் பேட்டை, எடத்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Feb 7, 2022

திருச்சி மாநகராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் வனிதா பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் வனிதா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவர்

11 வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று 11 வது வார்டுக்குட்பட்ட உறையூர் இந்திரா நகர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, சுபானியாபுரம், சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.