Mar 3, 2018

திருச்சி 3.3.18 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்

திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.


திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்  வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது