Oct 31, 2014

மக்கள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன்,84 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில்

மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட பல்லடம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், மூகாம்பிகைநகரில் பூமிபூஜை விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் படையப்பா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,காரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.நடராஜ்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.மணியன், சொக்கப்பன், நெசவாளர் கூட்டுறவு வங்கி இயக்குநர், பல்லடம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.