Oct 29, 2014

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கே.வி.ஆர்.நகர் பகுதியில்

உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.