Dec 22, 2014

திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்







திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்







திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை  வழங்கினார்.திருப்பூர்  துணை மேயர் சு.குணசேகரன், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டனர்



திருப்பூர், கேத்தனூர் ஊராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் துணை மேயர் குணசேகரன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



திருப்பூர், டிச. 22-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை தாங்கி  சிறப்புரையாற்றினார். அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், வெ.பழனிசாமி  அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் வனத்துரை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார்கள். அம்மா அவர்கள் தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்கள். இந்த தேர்தலை நீங்கள் அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அம்மா அவர்கள் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம். கடந்த வாரத்தில் தி.மு.க., அமைப்பு தேர்தலில் பல்வேறு தகராறுகள் நடந்ததை அறிவோம். ராணுவ கட்டுப்பாட்டுடன் நமது கழகத்தை நடத்தி வரும் அம்மா அவர்கள் மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார்கள். 
 அந்தந்த பகுதிகளில் கழக நிர்வாகிகள்ஆஅலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
 பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அம்மா அஅவர்கள் சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்கள். 
அ.தி.மு.க., இடைவெளியின்றி தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே கழக தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதி பெற்றவர்கள். கழக உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதியற்றவர்கள்.
 இந்த தேர்தலை சிறப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்த தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:&
பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொளவ்து; வருகிற அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது. திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக நிதியை வாரி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வண்ணம் சிறப்பாக செயலாற்றுவது, அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,  அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மருத்துவரணி செயலாளர் சீனியம்மாள், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, வீரபாண்டி சோமு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மீனவரணி செயலாளர் தங்கமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் டெக்ஸ்வெல் முத்து, வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,அவினாசி சுப்பிரமணி, ஜெகதாம்பாள், அன்னூர் சவுகத் அலி,பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, நத்தக்காட்டு மணி,  சேவூர் வேலுசாமி, சில்வர் வெங்கடாச்சலம், எச்.ஆர்.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., தியாகராஜன், கருணாகரன், கண்ணபிரான், தம்பி மனோகரன், பல்லடம் சித்ரா தேவி, ஏ.எஸ்.கண்ணன், சடையப்பன், கவுன்சிலர்கள் வசந்தாமணி, கேபிள் சிவா, சுபா மோகன், ஆனந்தன், லட்சுமி, வேலுசாமி, பிரியா சக்திவேல், சத்யா, கல்பனா, பேபி தர்மலிங்கம், ஜெயந்தி, சண்முகசுந்தரம், கே.பி.சண்முகம், வேலுசாமி,செல்வம்  சின்னசாமி, கனகராஜ், சபரி, கணேஷ், பாலன், சேகர், ஈஸ்வரன், சின்னசாமி, செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், அமுதா, முருகசாமி, உமா மகேஷ்வரி, கனகரராஜ், கலா, செல்வி, சுஜாதா சின்னசாமி, யு.எஸ்.பழனிசாமி, சரளை ரத்தினசாமி,அன்னூர் காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், பரமராஜன், ரத்தினகுமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,  செந்தில், மூர்த்தி, செல்வம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், வே.சரவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்








திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி,  கண்ணப்பன், பட்டுலிங்கம், சண்முகசுந்தரம், பூளுவபட்டி பாலு, மற்றும் கருவம்பாளையம் மணி, தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 பேர் ரத்த தானம் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்








திருப்பூர் ,டிச.22-

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று காலை  திருப்பூர் டவுனில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு நம்பிக்கை அமைப்பு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சரவணன் தலைமை தாங்கினார். 45 வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், நம்பிக்கை நிறுவனர் ரஹீம், மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிக் பஜார் மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.தங்கவேல் தொடக்கி வைத்தார். இதில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள்   ராதாகிருஷ்ணன், ஜான் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கழக அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கே.என்.சுப்பிரமணி, கீதாஆறுமுகம்,  நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் நம்பிக்கை அமைப்பின் 1 வது மண்டல நிர்வாகிகள் பாலாஜி, செல்வம், மணிவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக் பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதைதொடர்ந்து பிக் பஜார் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கிருஸ்துமஸ் குடிலை அனைவரும் பார்வையிட்டு  பாராட்டினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை  நம்பிக்கை நிர்வாகிகள் சதானந்தம், நாராயணசாமி, நக்கீரன், காளீஸ்வரன், சையது அபுதாகீர், சுதாகர், ராஜேந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர். 

படம் : திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்த போது  எடுத்தபடம்

திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்






திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  திறந்து வைத்தார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கலைமகள் கோபால்சாமி தலைமை  தாங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,  ஜான், முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ,  கழக அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன் ராஜ், தங்கமுத்து, கே.என்.சுப்பிரமணி,  கவுன்சிலர்கள் முத்து, கீதா, கலைமகள் கோபால்சாமி,  ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், சின்னு, ரத்னகுமார், நீதிராஜன், ராஜேஷ் கண்ணா,  ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Dec 18, 2014

HON"BLE FOREST MINISTER IN DEPARTMENT REVIEW MEETING


Dec 17, 2014

திருப்பூர் தொழிலுக்கு ரூ.200 கோடி வழங்கி புத்துயிர் வழங்கியவர் ஜெயலலிதா அமைச்சர்கள் தங்கமணி, மோகன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆகியோர் புகழாரம்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்  25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியின் பகுதியாக மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்கரை ஐ.கே.எப்.வளாகத்தில் நடைபெற்றது.இதில்  குமரன் ரோட்டில் இருந்து காசிபாளையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க தன்னிறைவு திட்டத்தில் ரூ.1 கோடியே, 67 லட்சமும், திருப்பூர் காவலர் குடியிருப்பில் பூங்கா அமைக்க ரூ.6 லட்சமும்  நிர்வாகத்திடம் காசோலையாக வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் தலைமை தங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களிடம் சாலை அமைப்பது, காவலர் குடியிருப்புக்கு பூங்கா அமைப்பதற்கு ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நிதி உதவி மற்றும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினர். 
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு, தொழில்கள் வளர தேவையான நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்து உள்ளது. திருப்பூரின் ஏற்றுமதி தொழிலை பொறுத்தவரை நேரம் தவறாமை அவசியம் என்பதை உணர்ந்து, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.ஏற்றுமதியாளர் சங்கத்தினரே மக்கள் முதல்வர் ஜெயலலிதா ரூ 200 கோடி கொடுத்த பின்னர் தான் திருப்பூர் தொழில் மீண்டது என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1800 கோடி சலுகை தொகைகள் தரப்பட்டுள்ளன.அவர் தேவையான நிதி உதவிகளை அளித்த படியால் ரூ.21ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
திருப்பூரை தாண்டி தென் மாவட்டங்களுக்கு நீங்கள் தொழில் செய்ய வரும்போது தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்கப்படும். தொழிலாளர்கள் எங்கு அதிகம் உள்ளனரோ அங்கு சென்று தொழில் தொடங்க முன் வந்தால் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தீரும். தென்மாவட்டங்களில் தொழில் துவங்க முன் வந்தால் நிலத்தின் பதிவு மதிப்பு 50 சதவீதமாக குறைக்கப்பட்டும்.வாட் வரி சலுகை கிடைக்கவும் மக்கள் முதல்வரின் அரசு வழி வகை செய்யும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குறைந்த அளவில் மின்கட்டணம் நடைமுறையில் உள்ளது. திருப்பூரில் தொழிலாளர்களுக்கு மகளிர் தங்கும் விடுதி கட்ட ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் அதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளார். தொழிலாளர்களை தங்க வைத்து பராமரிக்கும் பணியை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ள முன் வந்தால் அரசு, விடுதி கட்டடத்தை கட்டித்தர தயாராக உள்ளது. 
வருகிற மே மாதம் தொழில் முனைவோர் மாநாட்டை மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு நடத்துகிறது. அந்த மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குங்கள்.வேறு எங்கும் செல்லாமல் தமிழகத்திலேயே தொழில் முதலீடு செய்யுங்கள்.2001-06 ஜெயலலிதா ஆட்சியில் நோக்கியா கம்பெனி தமிழகம் தான் சிறந்த இடம் என தேர்வு செய்து தொழிலை துவக்கினார்கள். தினமும் 6 லட்சம் போன்களை தயாரித்து கொண்டு இருந்தனர். 2012 ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்து  ரூ.2080 கோடி வரி கட்ட வேண்டும் என கூறி நோக்கியா கம்பெனியை மூட வைத்த பெருமை  காங்கிரஸ், தி.மு.க.கூட்டணி கட்சியை சாரும்.
தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான அரசாக ஜெயலலிதா அரசு இருக்கிறது. தொழிலுக்காக நீங்கள் கேட்பதை செய்து தர ஜெயலலிதா தயாராக இருக்கிறார். அவர் நான்கு அமைச்சர்களை அனுப்பி தொழில் பிரச்சினைகளை கேட்டறிந்து வரச்சொன்னார் என்றால் எந்தளவுக்கு அவர் இந்த தொழில் மீது அக்கரையுடன் இருகிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அரசு துறை சார்பிலும் கூட்டு முதலீடுகள் அமைத்து தென் மாவட்டங்களில் தொழில் துவக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:- 
தமிழ்நாட்டில் ரூ.63 ஆயிரத்து, 130 கோடி முதலீட்டில் 63 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். 18 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.7 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் செய்யும் திருப்பூர் நகரம் என அறிகிறேன்.தமிழ்நாட்டில் 9.68 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 23, 508 குறு சிறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
திருப்பூரில் தற்போது நீட்ஸ் என்கிற திட்டம் மூலம் சென்னை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான சிறப்பு வர்த்தக முறை ஜெயலலிதா உருவாக்கப்பட்டு 95 ஆயிரம் சிறு தொழில் நிறுவனக்கள் துவக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 3.8 கோடி ரூபாய் வேலையில்லாதவர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.115.91 கோடி மானியத்தை இந்த மாவட்டத்தில் மட்டும் மக்கள் முதல்வர் அரசு வழங்கி இருக்கிறது. 
தொழிலாளர்களுக்கு நோய்கள் ஏற்படுகிறபோது அதை எளிதில் தீர்க்க இ.எஸ்.ஐ.,மருத்துவமனையை ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். திருப்பூரில் 100 படுக்கைகளுடன் மிகப்பெரிய மருத்துவமனை விரைவில் துவங்கப்பட உள்ளது. தொழிலாளர் துறைக்கு ஜெயலலிதா  பல்வேறு அறிவிப்புகளை வழங்கினார். அங்கன்வாடிகள் 50 அமைக்க உத்தரவிட்டுள்ளார். நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார்..உங்கள் தொழில் இடர்பாடுகள் அனைத்தும் தீர்க்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பின்னலாடை தொழில் மூலம் பல்வேறு சாதனை படைத்து திருப்பூர் நகரம் தொழிலில் சிறக்க காரணம் மக்கள் முதல்வர்தான்.இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடிக்கு அந்நிய செலாவணியை தரும் நகராக திருப்பூர் மாறி இருக்க காரணம் தொழில் சிறப்பாக நடத்த காரணமான ஏற்றுமதியாளர் சங்கமும், அவர்களுக்கு ஜெயலலிதா அரசு தந்த ஊக்கமும் உறுதுணையும் தான். திருப்பூரில் இந்த தொழிலை முன்னேற்றுவதற்காக அண்ணா தி.மு.க.ஆட்சி எப்போது எல்லாம் பொறுப்பேற்கிறதோ அப்போது எல்லாம் ஜெயலலிதா திருப்பூர் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தந்து உள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் திருப்பூருக்கு பல்வேறு திட்டங்கள் தரப்பட்டுள்ளன. 991-96ம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஜெயலலிதா ரெயில்வே மேம்பாலம் திருப்பூரில் உருவக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம்குமரன் மகளிர் கல்லூரி ஆகியன உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் திருப்பூர் நகர மக்களுக்காக ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இனைந்து 3வது குடிநீர் திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிரது. இவற்றுக்கெல்லாம் காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை திருப்பூர் மக்கள் மறந்து விட முடியாது. அவரது ஆட்சிக்கு முன்னர் திருப்பூர் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது என்பது தொழில் முனைவர்களான உங்களுக்கு நன்றாக தெரியும். 
 ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக சாய பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காண்போம் எனகூறி சென்றார். திருப்பூர் வடக்கு தொகுதியில் நான் போட்டியிட்டேன் எனக்கு அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்தீர்கள். உடனடியாக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து திருப்பூர் சாயா, சலவை பட்டறைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தொழிலும் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஆய்ந்து ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக கொடுத்து ஜெயலலிதா இந்த தொழிலை வாழ வைத்துள்ளார்.அவர் இன்னும் பல்வேறு திட்டங்கள் தொழில் துவங்கவும், தொழில் சிறக்கவும் தொடர்ந்து வழங்கி வருகிறார்,.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
சுற்று சூழல் துறை அமைச்சர் தொப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசியதாவது:-
 மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இன்ரைக்கு ஜெயலலிதா ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற முறையை அமல்படுத்தியதன் மூலமாக இன்று நொய்யல் ஆற்றில் நல்ல தண்ணீர் ஓடுகிறது. 8000 டி.டி.எஸ். அளவில் இருந்த நொய்யல் ஆற்றின் தண்ணீர் மாசு  ஜெயலலிதா நடவடிக்கையால் 2000 டி.டி.எஸ்.க்கும் குறைவாக உள்ளது. அதே நேரம் தொழிலும் முழுமையாக இயங்கி வருகிறது. மின்சாரம் தடையில்லா நிலையை உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் தான் இன்று நீங்கள் தொழிலை சிறப்பாக நடத்தும் நிலையை எட்டி இருக்கிறீர்கள். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் காற்றுமாசு கட்டுப்படுத்தும் கருவிகள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரிண்டிங் தொழிற்சாலிகளில் ஆர்.ஓ., சுத்திகரிப்பு கருவிகளை அமைக்க உடனடியாக இந்த அரசு அனுமதி வழங்கும். மின் வெட்டு இல்லாத மாநிலம் தமிழகம்தான்.திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து உதவிகரமாக இருந்து ஏற்றுமதி இலக்கை எட்ட தொடந்து ஒத்துழைப்பு வழங்கும்.எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஒத்துழைப்பு தந்து உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் பேசும்போது,
திருப்பூர் ஏற்றுமதி வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கும், உதவியும் ஏராளமாக கிடைத்து இருக்கிறது.திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த 3 ஆண்டுக்கு முன்னால் கேள்வி கூறியாக இருந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற 3 வது நாளில் இதற்கு உடனடி தீர்வு கண்டார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.25 ஆயிரம் கோடி பின்னலாடை ஏற்றுமதி மூலம் எட்டுவோம். திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடை கொண்டு செல்ல தூத்துக்குடி துறைமுகம் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக தூத்துக்குடி சாலையை அகலபப்டுத்தி தஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்டும் வரிச்சlலுகையில் ரூ.300 கோடி நிலுவையில் உள்ளது.அவற்றை தமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு மின்கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டும்  என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைமை உரையில் பேசினார்.
விழாவில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன்ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில் அதிபர்கள் அகில் ரத்தினசாமி, சுதாமா கோபாலகிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, எம்பரர் பொன்னுசாமி, கே.எம்.நிட்டிங் சுப்பிரமணியம், எஸ்பி என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், இளம் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அருண், டிப் சங்க தலைவர் அகில் மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





முடிவில் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஈஸ்ட்மென் சந்திரன் நன்றி கூறினார்.