Sep 29, 2014

மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து



 











எழுமலை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அதிர்ச்சியுற்ற, மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நல திட்டங்கள்:மதுரை, எழுமலை முருகன் மகள் நாகலட்சுமி, 17. அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று காலை, 9:45 மணிக்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டின் முன் வந்தார்.அங்கு, 'லேப் - டாப், சைக்கிள், நோட்டு புத்தகம் கொடுத்த அம்மாவை, சிறையில் அடைச்சுட்டாங்களே...' எனக் கூறியபடி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரை, ஆபத்தான நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்து
வமனையில் சேர்த்தனர். டி.எஸ்.பி., சரவணக்குமார் விசாரித்தார். நாகலட்சுமி கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய முதல்வரை சிறையில் அடைத்ததை, தாங்கிக் கொள்ள முடியாததால் தீக்குளித்தேன்,'' என்றார்.

எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரித்தார். பின் மேல் சிகிச்சைக்காக நாகலட்சுமி, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூதாட்டி சாவு:விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர், தங்கவேலு மனைவி அம்மணியம்மாள், 70; அ.தி.மு.க., உறுப்பினர். இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, தன் வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெ., குற்றவாளி என அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்ததும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

தொண்டர் தீக்குளிப்பு: கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம், காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன், 52; தீவிர அ.தி.மு.க., விசுவாசியான இவரது மனைவி லட்சுமி, அப்பகுதி, ஜெ., பேரவை கிளை பொருளாளராக உள்ளார்.நேற்று முன்தினம், ஜெயலலிதா குறித்த செய்தியை அறிந்த பாலகிருஷ்ணன், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, பாலகிருஷ்ணன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை மேலும் ஒரு மாணவி தீக்குளித்தார்

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த லால்குடி கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 ஆண்டு சிறை சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மிகுந்த வேதனை இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீவிர சிகிச்சை இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sep 28, 2014

TUJ தலைவர் கூறிய தகவல்

யார் இந்த குன்ஹா?? இதோ சில விவரங்கள் (1) சுமார் 11 ஆண்டுகலுக்கு முன்னர் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் செல்வி உமாபாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் வந்து ஆர் எஸ் எஸ் கொடியை ஏற்றி வைத்தார் உடனே கர்நாடக கத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர் மீது எப்ஐஆர் போட்டது இதை ரத்து செய்ய பெல்காம் நீதிமன்றத்தில் கர்நாடகா பிஜேபி யினால் வழக்கு தொடரப்பட்டது ஆனால் அதை ரத்து செய்ய மறுத்து உமாபாரதி முதல்வர் பதவி இழந்து சிறை செல்ல காரணமாக இருந்த்து இதே குண்ஷா தான் அப்போதே இவருடைய இந்து எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெரிதும் விவாதிக்கப்பட்டது (2) ஜெயலலிதா மீது அரசாங்க வக்கீல் கூறிய 18 வகையான சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளி விவரத்தோடு முதல்வரின் வக்கீல் குமார் counter செய்த பிறகும் இதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பு கொடுத்தது சட்டம் படித்த அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. (3) தீர்ப்பின் முழு தண்டனை முடிவை மாலை ஆறு மணி வரை வழங்காமல் இழுத்தடித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்துக்கு ஜாமீன் கேட்டு செல்லமுடியாமல் செய்த காரணம் என்ன? (4) முன் கூட்டியே பரப்பன அக்ராகார நீதி மன்றத்தில் பெண்கள் சிறையினை தயார் நிலையில் வைத்த காரணம் என்ன?? (5) 950 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆனால் 66 கோடிக்கும் உன்டான கணக்கை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தாக்கல் செய்தும் அதைப்பற்றி எல்லாம் பரீசிலனை செய்யாமல் 130 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத்தண்டனை யும் கொடுத்த்து ஏன் ?? (6) இது ஏற்கனவே குற்றம்சாட்ட பட்டவர்களின் வாதங்கள் தொடங்குவதற்கு முன்னரே விலைபேச பட்ட மற்றவர்களாள் எழுதி கொடுக்கபட்ட தீர்ப்பா?? (7) சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் மற்றும் 3 பேர்களை " குற்றவாளிகள் " என்று குண்ஹா கூறியது ஏன் ?? குற்றம்சாட்ட பட்டவர்கள் என்றுதானே கூறவேண்டும் இரு தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கும் நாள் ( அதாவது இன்று ) தான் குற்றவாளிகள் என்று கூறி இருக்க வேண்டும்!! 8 மாதங்களுக்கு முன்னரே கூறிய மர்மம் என்ன?? தீர்பை முன்னரே முடிவு செய்து சும்மா கடனுக்காக நடத்த பட்ட விசாரணை நாடகமா இது?? (9) கர்நாடக த்திற்கு எதிராக காவிரி நடுவன் மன்ற ஆனையை தமிழகதிற்கு பெற்றதுக்கு முதலமைச்சர் க்கு கர்நாடக காங்கிரஸ் சால் கொடுக்க பட்ட பரிசா?? சிந்தித்து பாருங்கள் இந்த சதிகார கும்பலை இனம் கண்டு கொள்ளுங்கள். இதிலிருந்து மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டு வருவார். சோதனைகள் அவருகென்ன புசுசா??

Sep 26, 2014

கால்நடைத் துறையில் புதிதாக ஆய்வாளர் பணி நியமனம்: உத்தரவுகளை அளித்தார் முதல்வர் ஜெயலலிதா..


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.



கால்நடைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை, மேம்பட்ட பராமரிப்பு முறைகள் ஆகிய சேவைகள் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மூலம் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கால்நடைக் கிளை நிலையங்களில் செயற்கைக் கருவூட்டல், முதலுதவி சேவைகள் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொலை தூரக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த நிதியாண்டில் 289 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012-13-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கால்நடை ஆய்வாளர்களில் பயிற்சி முடித்த 307 பேருக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2-க்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார்.
இதன் மூலம், தொலைதூர குக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குச் செயற்கை முறைக் கருவூட்டல், முதலுதவிச் சேவைகள் ஆகியன அவற்றின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2014

அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.









திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு  திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,   ரத்தினகுமார், பி.லோகநாதன் பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழா








திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணையதள சேவை கிராமங்களை சென்றடைய கேபிள் மூலம் சேவை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு










திருப்பூர், செப். 25-
திருப்பூர்   மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை  சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து  கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான  விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர்   கு.கோவிந்தராஜ்   தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன்   முன்னிலை வகித்தார்..  இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன்  சிறப்புரையாற்றினார்.
 வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது   அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது.    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.  அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள்.  இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும்.  எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும்.  மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள்.  விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள்.  இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்   பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா;  உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா  கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள்.  இதனால்  கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது.  3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர் 
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.)   வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர்   உடுமலை  கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்   கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர்   .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்)  .பழனிவேலன், மேலாளர்  (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன்,  கிளை மேலாளர் தனிவட்டாட்சியர்  எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர்  ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.

அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.







திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி கழக செயலாளர் பூண்டி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் ,செல்வராஜ், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி கழக செயலாளர் வேலுசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பூண்டி லதா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், கருவம்பாளையம் மணி, ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.














திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ,  அங்கேரிபாளையத்தில் நடந்தது. 
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார்,  தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர்  வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள்  சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.