Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.

திருச்சி மாநகரம் 11-வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வனிதா போட்டி

 திருச்சி

திருச்சி  அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் 11ஆம் வார்டு கவுன்சிலராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வனிதா கூறுகையில் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ச்சியாக செய்து வருகிறேன்


தற்போது கவுன்சிலராக போட்டியிடுகிறேன் ஏற்கனவே மக்களுக்கு கவுன்சிலராக நான் பணியாற்றியுள்ளேன் அதேபோன்று கவுன்சிலராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது வார்டு மக்களுக்கு சேவை செய்ய என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் அரசு சார்பில் கிடைக்கப் பெறும் அனைத்து சலுகைகளையும் எனது வார்டு மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்தார்


Jan 17, 2022

திருச்சி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

 திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


சோமரசம்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுஅதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டை குழுமணி ஜீயபுரம் பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல இடங்களில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .   முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபி நடராஜன், மணிகண்டம் முத்துக்கருப்பன்  , நகர செயலாளர்கள், முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன், பேரூர் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை, வார்டு, பனையபுரம் கர்ணன், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

Dec 11, 2021

திருச்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய மகளிர் அணி இணைச் செயலாளர்

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நளை சிறப்பாக கொண்டாடிய 50 உட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி பருப்பு உணவு வகைகளை சேவை செய்த எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்


திருச்சி காஜா பேட்டை அருகில் 50 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு


மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்குஅரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை

முன்னாள்  அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பொது மக்களுக்கு வழங்கிய போது  அருகில் முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Aug 15, 2021

திருச்சி முத்தரசநல்லூர் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் சுதந்திர தின விழா

 


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா

முத்தரசநல்லூர்  அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா


கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட மெம்பர்  கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் முத்தரசநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி மக்கள் சேவையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதும் முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



Mar 27, 2021

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளர் புதிய திட்டம் அமுல் படுத்துவேன் வாக்குறுதி

 *ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பு விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும் குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் வாக்குறுதி* 


திருச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கம்பரசம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளருமான குப.கிருஷ்ணன் இன்றைக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

 *முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது* 

பொதுமக்கள் நலன் கருதி முத்தரசநல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி தருவதில் ஆதிசிவன் பெரும்பங்கு வகித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது 

அப்போது குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறும் பொழுது


அம்மா இருந்திருந்தால் என்ன செய்வார்களோ அந்த அத்தனையும் நான் செய்து தருகிறேன் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதித்துவெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்


மேலும் முத்தரசநல்லூர் ஊர் மக்களே அண்ணா திமுகதான் இந்த தொகுதியை வெல்வதற்கு எவரும் பிறக்கவில்லை


அடிப்படை வசதிகள் பஞ்சாயத்துக்களில் செய்து கொடுத்தாலும் தொகுதி மேம்பாட்டு களின் கீழ் புதிதாக 


திருச்சி விரிவாக்கத் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் வெற்றி பெற்ற பின்பு சட்டமன்றத்திலே பேசி அதற்கு ஒரு வடிவம் அமைக்கப்பட்டு சிறப்பு திட்டத்தின் கீழ்

அனைத்து விஸ்தரிப்பு பகுதிகளும் நடைமுறைப்படுத்தப்படும்


இந்தியாவிலேயே கார்ப்பரேட் கம்பெனி முதலீடு செய்யக்கூடிய இடம் தமிழ் நாடு தான்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எத்தனை தொழில் நிறுவனம் கொண்டுவந்தாலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தர முடியும்


திருச்சியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நான் தான் நாங்கள் எல்லா வேலையும் செய்து முடித்தோம் ஆனால் கருணாநிதி ஒரு பொட்டு வைத்து நாங்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி என்று பெயரிட்டோம் பெரியவர் தமிழ் கி ஆ பெ விஸ்வநாதன் பெயரை மாற்றி வைத்தார்கள் பொட்டு வைத்தவர்கள் எல்லாம் நம்முடன் குடும்பம் நடத்த முடியாது

தொலைநோக்கு பார்வையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக போய்க்கொண்டிருக்கிறது தமிழகம் என்று கூறினார்.

இந்நிகழ்வின்போது  பனையபுரம் கர்ணன் முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Mar 23, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கோப்பு பகுதியில் குளிர் வசதியுடன் திருமண மண்டபம் கு.ப.கிருஷ்ணன்

 கூட்டுறவு கடன், நகைக்கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடனை தள்ளுபடி செய்த அம்மாவின் நல்லாட்சித் தொடர ஆதரிப்பீர் இரட்டை இலையை - ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர்  குப கிருஷ்ணன்


தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.குப கிருஷ்ணன் அவர்கள் 7ஆம் நாள் பிரச்சாரமான இன்று அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை,  போதாவூர்,  புலியூர், வியாழன்மேடு, கணேசபுரம், போசம்பட்டி, மணியன் நகர், எட்டரை,  மஞ்சாங்கோப்பு, முள்ளிக்கரும்பூர், முல்லைநகர், கோப்பு, அயிலாப்பேட்டை, குழுமணி, தச்சக்குடி பேரூர், ஏகிரிமங்கலம், சாத்தனூர்,     சீராத்தோப்பு, மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான்நல்லூர், மல்லியம்பத்து, பெருங்குடி, செங்கதிர்சோலை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இன்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த பொழுது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களை பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  செல்லும்போது அந்த வழியில் உள்ள முதலைப்பட்டியில் மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியைப் பெருக்குவதற்கு “வெப்பமூட்டி குடில்” அமைத்து தரப்படும் எனவும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்றும் மல்லிகை பூவில் இருந்து செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இத்தொகுதியில் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.  


அப்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம் எனவும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500 வங்கி கணக்கில் செலுத்துவோம் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார், அதேபோல திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கத்துடன் 60 ஆயிரம் ரூபாய் அம்மா அரசால் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

மேலும், அவர் கூறுகையில் ஸ்ரீரங்கம் தொகுதி மாண்புமிகு அம்மா அவர்கள் நின்று வென்ற தொகுதி, அம்மா வெற்றிபெற்ற பிறகு இந்த தொகுதியில் பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்தார்கள். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், வறட்சி நிவாரணம் கொடுத்தார்கள், நம்முடைய டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள், இந்த வருடம் நல்ல மழை பெய்து வாழை, நெல் பயிர்கள் எல்லாம் நன்றாக இருந்தது. அறுவடை நேரத்தில் கனமழை பெய்து நெற்பயிர் எல்லாம் அழுகி வீணாகி விட்டது. எனவே, கருணை உள்ளம் கொண்ட நம்முடைய விவசாய  முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தார், அதோடு 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடன்களையும், சுயஉதவிகுழுக்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார்.

அதேபோல பம்புசெட்டிற்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் தந்து கொண்டு இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் அரசு, அதேபோல பெண்களின் சுமையை குறைக்க மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி அனைத்தையும் விலையின்றி அளித்ததும், வரும் காலத்தில் விலையில்லா வாஷிங்மிஷன், விலையில்லா 6 சிலிண்டர் வழங்க இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சிதான், அதேபோல ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு 7500 ரூபாயும் தரஇருப்பதும் மாண்புமிகு எடப்பாடியார் அரசுதான்.

மாணவர்களை கொடிய கொரோனா வைரஸ்சில் இருந்து, மாணவர்களை காப்பாற்ற “ஆல்பாஸ்” போட்டவரும் நம்முடைய எடப்பாடியார் தான், அதேபோல மாணவர்கள் படிக்கும் போது பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்ததும் நம்முடைய எடப்பாடியார் தான். எனவே இப்படிப்பட்ட நல்லாட்சி தொடர நீங்கள் எல்லாம் தொடர்ந்து புரட்சித்தலைவரின் சின்னமாம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ், முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும்   பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.

திருச்சி ஜீயபுரம் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில் கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி

 மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில்  கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி.


ஜீயபுரம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் கடும் வெயிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.நேற்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர், பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது முதலில் கீரிக்கல்மேடு  பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி போதாவூர் சென்றபோது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன்  வரவேற்றனர் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகள் சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  சென்றபோது  அந்த வழியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைக்க கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை  பூ உற்பத்தியைப் பெருக்கவதற்கு வெப்பமூட்டி குடில் அமைத்து தரப்படும்.மேலும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்அதனை தொடர்ந்து வியாழன்மேடு,எட்டரை,கோப்பு,குழுமணி,உள்ளிட்ட்பல.வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று,

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  1500 வங்கி கணக்கில் செலுத்துவோம்,வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மேலும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாய் உயர்தியது என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ்,முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும் பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சென்றனர்