May 17, 2018

திருச்சி கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் முதல் கட்டமாக ஆய்வு

திருச்சி   17.5.18

திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குப் பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.வரும் கல்வியாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப் படுகிறதா ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் 100% உறுதி செய்யப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வை வருவாய் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். பள்ளி வாகனஒட்டுனர்களுக்கு உடல் தகுதி, கண் பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

அந்த வகையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 17 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களும் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள் உள்ளதா, டயர் மற்றும் பிரேக் திறன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பின் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஆய்வின் போது பள்ளி வாகனஒட்டுநர்களுக்கு Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவனை செய்யப்பட்டு 152 ஒட்டுநர்களில் 16 ஒட்டுநர்க்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுநர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை எப்படி அணைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஆய்வின் போது சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், திருச்சி சரகம் துணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, உதவி காவல்துறை ஆணையர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசை தம்பி, மணப்பாறை மோட்டார் வாகனம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அனிதா, முகமது மீரா ஆகியோர் உடன் இருந்தனர்

Apr 27, 2018

திருச்சி பள்ளி கல்வி துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கருத்தரங்கம், மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா, உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாரளுமன்ற உறுப்பினர் பா.குமார்
கலெக்டர் ராஜாமணி, மாவட்ட நூலக அதிகாரி சிவக்குமார், மாணவரணி கார்த்திகேயன், அருள் ஜோதி, ஏர்போர்ட் விஜி,பொன்.செல்வராஜ்,தர்கா காஜா, திருப்புகழ், அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன்
பலர் கலந்து ெகாண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்கொண்டு வருகிறது. அதற்கான கடிதத்தை சிபிஎஸ்சி-க்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விடுமுறை காலங்களில்  சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

Apr 26, 2018

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவள கத்தில் அமைச்சர் தங்க மணி தலைமையில் ஆய்வு கூட்டம்

திருச்சி .26.04.18.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் திருச்சி மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் தற்போது நடைபெறுகிறது.
அமைச்சர்கள் வளர்மதி, வெல்ல மண்டி நடராஜன்
M.P. குமார், ஆட்சியர் கு.ராசா மணி பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய,மின்சாரத் துறை
அமைச்சர்,தங்கமணி
மின்வாரியத்துறை அதிகாரிகள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அதிகமாக தேவை என கண்டறியப்பட்டு
அரசும் உடனடியாக  132 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர்  110 விதியின் கீழ் அறிவித்தார்.
துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களான
திருச்சி தஞ்சையில் விவசாயம் பிரதானமாக இருந்து வருவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை  என்றாலும் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டாலே பொது மக்கள் அது குறித்து என்னிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

Apr 20, 2018

திருச்சி ஆலோசனைக் கூட்டம்

 திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலா ளர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அட்டை வழங்கிய போது
 இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி, வணக்்க்கம் சோமு
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Mar 29, 2018

திருச்சி போக்குவரத்து துறையினக்கு அமைச்சசர்கள் பாராட்டு

திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Mar 17, 2018

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் , வளர்் மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார், தலைமை மருத்துவர்ககள் சம்சத் பேகம், அனிதா சித்த மருத்துவர் காமராஜ் மற்றுும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மரம் நடுவிழா


திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்

இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Mar 16, 2018

Trichy Central minister program

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்


திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..