Mar 17, 2018

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் , வளர்் மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார், தலைமை மருத்துவர்ககள் சம்சத் பேகம், அனிதா சித்த மருத்துவர் காமராஜ் மற்றுும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்