Nov 27, 2014

மக்கள் முதல்வரின் முக்கிய அறிவிப்பு















தலைமைக்கழக அறிவிப்பு.





Nov 26, 2014

தலைமை கழக அறிவிப்பு


திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆய்வு

திருப்பூர் பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவினை யொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு மற்றும் தூய்மைபடுத்தும் பணியினை மேயர் விசாலாட்சி பார்வையிட்டார்.
திருப்பூர் பெருமாள் கோவில் திருக்குட நன்னீராட்டுப் (கும்பாபிஷேக) பெருவிழா நடைபெறுகிறது. விழா தரிசனத்துக்காக பல்லாயிரக்காணக்கான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள சாலைகளில்  ரூ.35 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பேவர் பிளாக் கற்கள் பாதிக்கும் பணிகள்  என மாநகாட்சி சார்பில் நடைபெறுகிறது.பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காகவும், கோவில் விழா சிறப்பாக நடைபெறவும் மாநகராட்சி பணியாளர்களை துரிதமாக பணிகளை செய்து முடிக்க உத்த்ரவிடப்படுள்ளது. மேலும் கும்பாபிஷேக விழா நாளில் இப்பகுதியில் 4 இடங்களில் குடிநீர் தொட்டி, 4 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. இத்துடன் பூ மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள  வீதி பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும், சுகாதாரம் பேணவும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். கும்பாபிஷேக நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்படும்.இவ்வாறு மேயர் விசாலாட்சி கூறினார். 
இந்த ஆய்வின்போது ராஜ்குமார், முத்துக்குட்டி, பிரகாஷ், சரவணன்,உடன் 3-ம் மண்டல உதவி ஆணையாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, சுகாதார மேற்பார்வையாளர் பிச்சை, ஒப்பந்ததாரர் மந்திராச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுவினால் பரவக்கூடிய



டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும் வகையில் கொசுப்புழு உற்பத்தியினைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நோய் பரவுவதை தவிர்ப்பதற்காகவும், கோயம்புத்தூர் போன்ற பெறு நகரங்களில் முதிர்ந்த கொசுக்களை அழிக்கப் பயன்படுத்துகின்ற பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரம் போன்று, உடுமலை நகராட்சியிலும் மினி டெம்போ லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரத்தினை உடுமலை நகராட்சியின் சார்பாக நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர்.அருண், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன்,பி.செல்வம், சிவக்குமார், ஆர்.செல்வம் மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை, 

திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டி

ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க.புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெகன்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிவாசகம், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ், பேரவை நிர்வாகிகள் ரகுபதி, ராஜேந்திரன் வடிவேலு, போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி, கவுன்சிலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் நவீன கருவி மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுவடை செய்வது பற்றியும், பதநீர் இறக்கி, அதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தென்னையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி தாக்குதல், நோய்கள் பராமரிப்பு மற்றும் களைச்செடிகள் பராமரிப்பு பற்றிய அனைத்து தொழில்நுட்பங்கள் பற்றியும், இவர்களுக்குத் தேவையான முதலுதவி, சிறுசேமிப்பு, தகவல் பரிமாற்றம், மது அருந்துவதால் ஏற்படும், தீமைகள், அதிலிருந்து மீள்வது பற்றிய கருத்துக்களும் வழங்கப்பட்டது.

இறுதி நாள் விழாவிற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர். சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ரூ.3500 மதிப்புள்ள நவீன கருவி, ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டையும் வழங்கினார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் பெரியநாயகம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெயமணி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்க செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.

உடுமலை ரெயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.

உடுமலை நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார்.
 திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாலப்பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையில், பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி ரெயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் மேம்பாலப்பணிகள் முடிவடையாத சூழ்நிலை ஏற்படுமானால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தது இருந்தனர்..


ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனையின் பேரில் மேம்பால பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அண்ணா தி.மு.க. நகர\ செயலாளர் கே.ஜி.சண்முகம், வழக்கறிஞர் கண்ணன், கவுன்சிலர் கண்ணன், தொகுதிச் செயலாளர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றியக்குழுதலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் டேம்.சண்முகம் தலைமையில், துணைத்தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வீரமலை,  ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, வட்டார வளர்ச்சி  அலுவலர் (நிர்வாகம்) மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் தண்ணீர்பந்தல் நடராஜன், வாசுதேவன் உள்ளிட்டவர்களும், அரசு அலுவலர்களும்  கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுபினர்கள் பேசுகையில், 
   நஞ்சிகாளிபாளையம் பகுதியில் தார்ரோடு அமைக்கக்கோரி கலெக்டர் கலந்து கொண்ட மனுநீதி முகாமில் விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாராபுரம் தளவாய்பட்டினம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. குறிப்பாக குப்பை மற்றும் தெருவிளக்கு பிரச்னை அதிக அளவில் உள்ளது. குண்டடம் பகுதிக்கு காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்குபகுதி 11வது வார்டு முழுவதும் குடிநீர் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. ஆககே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.        நந்தவனம் ஊராட்சி அத்திகாடு பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிப்பட்டி பகுதியில் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை தாலுகா உழவர் சந்தை அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே உள்ளவர்களுக்கே கடைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் கடைகள் ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வணிக வளாகத்தின் மேல் பகுதி முழுவதும் கடைகள் காலியாக உள்ளது. அதை மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு ஒதுக்க வேண்டும். 
தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட நந்தவனம்பாளையம் ஊராட்சியில் ரேசன் கடைகளில், தமிழக முதல்வரின் சிறப்பு  திட்டங்களில் ஒன்றான விலையில்லா அரிசி திட்டத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், விலையில்லாமல் வழங்க வேண்டிய 20 கிலோ அரிசிக்கு பதிலாக 15 கிலோ மட்டும் வழங்கி வந்தார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தும்பரப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் இன்னும் 15 கிலோ அரிசி மட்டுமே வழங்கி வருகிறார்கள். அரசின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேற்கண்டவாறு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பேசினர். அவர்களின் புகாருக்கு பதிலளித்து தலைவர் எம்.சண்முகம் பேசியதாவது:-
உறுபினர்களின்  கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் சேதமடைந்த குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க நெடுச்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான  ஏற்பாடுகள் செய்யப்படும்.துங்காவி ஊராட்சியில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு தாமதம் இல்லாமல் இலவச வீட்டுமனை பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
குறிப்பாக அரசின் திட்டத்தை செயல்படும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதி நிலையை பொருத்து, 17 வார்டுகளிலும் ரூ.4 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் கட்ட அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் இடத்தை தேர்வு செய்து வழங்கவேண்டும்.குறிப்பாக கழிப்பிடங்கள் பள்ளி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில், பள்ளி அருகில் இருக்கும்படி இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக சாக்கடை கால்வாய் கட்டும் இடத்தையும் தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும். 
இவ்வாறு மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் பேசினார்.