Nov 26, 2014

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுவினால் பரவக்கூடிய



டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும் வகையில் கொசுப்புழு உற்பத்தியினைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நோய் பரவுவதை தவிர்ப்பதற்காகவும், கோயம்புத்தூர் போன்ற பெறு நகரங்களில் முதிர்ந்த கொசுக்களை அழிக்கப் பயன்படுத்துகின்ற பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரம் போன்று, உடுமலை நகராட்சியிலும் மினி டெம்போ லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரத்தினை உடுமலை நகராட்சியின் சார்பாக நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர்.அருண், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன்,பி.செல்வம், சிவக்குமார், ஆர்.செல்வம் மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை,