Nov 26, 2014

திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டி

ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க.புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெகன்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிவாசகம், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ், பேரவை நிர்வாகிகள் ரகுபதி, ராஜேந்திரன் வடிவேலு, போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி, கவுன்சிலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.