Nov 17, 2014

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காலை 7.45 மணி முதல் 12.30 மணி வரை மகா யாகம் நடைபெற்றது .ஜெயதுர்கை அம்மனுக்கு 108 சுமங்கலிகள் கலந்து கொள்ளும் பூஜை நடைபெற்றது .108 கோ பூஜை ,ஸ்ரீ கஜ பூஜை ,ஸ்ரீ அச்வ (குதிரை) பூஜை மற்றும் 108 சிவசாரியர்கள் பங்கேற்று 9 லட்சம் ஆவர்த்தி ஜவம்,9 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .இந் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அமைச்சரின் துணைவியார் ஜெயந்தி செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் பங்கேற்றனர் ..

திருப்பூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.3.52 கோடிக்கு நலத்திட்டங்களை அமைச்சர் ஆனந்தன் வழங்கினர்

திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மீயர் விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்.  
திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில், 61-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பல்லடம் ரோடு,லட்சுமி திருமண மண்டப கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்று பேசினார். திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு திட்ட விளக்க உரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில்,  மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இன்றைக்கு அந்த திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் திட்டங்கள் தொடர்கின்றன. இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தில் அதற்கு தலைவர், இயக்குனர்களை நியமித்து சங்கங்களின் செயல்பாடுகளை அதிகரித்துள்ளார்.விவசாயத்துக்கான அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துகிறது.
கடந்த ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக பருத்தியும் 2 கோடி ரூபாய்க்கும்  அதிகமாக இதர விளை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு கடனுதவிகள் செயல்பட்டு கொண்டிருக்க காரணம் இந்த துறையை சிறப்பாக மேம்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்று ஒரு நாள் மட்டும் 591 பயனாளிகளுக்கு 3.53 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்மா காய்கறி அங்காடிகள் துவக்க ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த விழாவில் வட்டியில்லா கடனாக மாற்றுத் திறனாளிகள் 343 பேருக்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2,015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ. 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக் கடனாக 259 பேருக்கு ரூ. 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ரூ. 4 கோடி மதிப்புக்கு பருத்தியும் ரூ. 2 கோடி மதிப்புக்கு இதர விளை பொருள்களும் கூட்டுறவு சங்கங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் மட்டும் 591 பயனாளிகளுக்கு ரூ. 3.53 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லாமல் 20 கிலோ அரிசி, கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ஜெயலலிதா ஒருவர்தான் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன. 
இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கிகளும்,3 நகர கூட்டுறவு வங்கிகளும் உள்பட மொத்தம் 226 கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான்.
 இன்றைக்கு வட்டியில்லா கடனாக மாற்றுத்திரனாளிகள் 343 பேருக்கு 2 கோடி ரூபாய்க்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வசதிக்காக 5 சங்கங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. 
 நமது மாவட்டத்தில், 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக்கடனாக 259 பேருக்கு 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 
 திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையுரையில், பொதுவாக கூட்டுறவு சங்கம் என்றால் ரேசன் கடை என்று மட்டும் தான் நினைத்திருந்தார்கள்.தற்போதைய அரசு சங்கங்களுக்கு நிறைய நிதி அளித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் 240 சங்கங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 20018 நபர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி முன்னிலையுரையில்  உலகம் இன்று தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டது.கூட்டுறவு துறையின்  இது போன்ற விழாக்கள் மூலம், நமது  ஒற்றுமை,மரபு, மாண்புகள் காப்பாற்றப்படுகின்றன.தனிமரம் என்றைக்கும் தோப்பாகாது; கூடி செய்தால் தான் எதையும் செய்ய முடியும். மக்கள் முதல்வர் ஜெயலலிதா கூட்டுறவாக செயல்பட வேண்டும் என்று தான் கூறி இருக்கிறார். கூட்டுறவு உலகத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி. எனவே, ஜெயலலிதாவிற்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.,பி.சி.மகேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மடத்துக்குளம் சி.சண்முகவேலு, காங்கயம் என்.எஸ்.என்.நடராசன், பல்லடம் பரமசிவம், தாராபுரம் பொன்னுசாமி,அவினாசி கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
மேலும் பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிசாமி மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கே.பி.சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருணாகரன், மார்க்கெட் சக்திவேல், சித்துராஜ், ராமமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி,கோகுல், துத்தேரிபாளையம் நாகராஜ், எஸ்.எஸ்.மணியன் மற்றும் கருவம்பாளையம் மணி, ருக்மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், வளர்மதி சாகுல் ஹமீது, தாமோதரன், நீதிராஜன்,ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 61வது கூட்டுறவு வார விழாவினை யொட்டி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு, மண்டல அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் துணை பதிவாளர் ரவீந்திரன், துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (திருப்பூர் சரகம்),  சண்முகவேலு (பொது விநியோக திட்டம்), கூட்டுறவு சார் பதிவாளர் ((பொது விநியோக திட்டம்) ஜெயராமன், அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பிரைம் நாத், கேசவன் (கோவை கூட்டுறவு ஒன்றியம்) மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் வடக்கு தொகுதி மேற்குப்பதி அசோகபுரத்தில்

வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்குடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெ.அய்யாசாமி, ஜெகநாதன் உளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு தொகுதி, மேற்குப்பதி அசோகபுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி



மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர். ஜான், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம்.பழனிசாமி, பூலுவபட்டி பாலு, மாவட்ட நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, மணி, கோகுல், கண்ணன், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சிதம்பரம், பானு பழனிசாமி, குமாரசாமி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர். 

Nov 16, 2014

Nov 14, 2014

பிரான்ஸ் எம்.ஜி.ஆர். விழாவில், மக்களின் முதல்வர் ஜெயலலிதா தபால் தலை வெளியீடு


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் 2 நாட்கள் மாநாடு


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு (2015) மே 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறுகிறது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இந்த மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 3–வது இடத்தில் உள்ளது. ஜெயலலிதா அறிவித்த ‘தொலைநோக்கு திட்டம் 2023’ தொழில் கொள்கையில் காணப்பட்டுள்ள முற்போக்கு அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டை பெருமளவுக்கு ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் சந்தை வர்த்தக கொள்கையால், பொருளாதார மேம்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மாநிலத்தில் போர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச மோட்டார் நிறுவனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தி நிலையங்களை தொடங்கியதன் காரணமாக, சர்வதேச அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
மின்னணு உற்பத்தியில்
பெரும் புரட்சி
இதேபோல், கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மின்னணு உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இதனால் மோட்டோ–ரோலா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிரானிக்ஸ், டெல், சாம்சங் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்ததோடு, தற்போது மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே பெரும் பங்கு வகிக்கிறது, இதேபோல், ஜவுளி, தோல் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சி
22% அதிகரிப்பு
தொழில்மயமாக்கப்பட்ட 3 மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் தமிழகம், சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 217 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ன் மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதோடு, தானியங்கி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும், தொழில்துறையில் மின்தங்கிய தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான தொழிலாளர்கள், தொழில் தொடங்கிட ஏற்ற சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னேற்றம் கண்டுவரும் தமிழகத்தில், சர்வதேச மூதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது.
அபரிமிதமான தொழிலாளர்கள்,
தொழிலுக்கு ஏற்ற சூழ்நிலை
மின்னணு, உதிரி பொருட்கள், ஜவுளி, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல் மற்றும் சாலைகள், சிறுதுறைமுகங்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மரபுசாரா எரிசக்தி முகமைகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு வகை செய்யும்.
ஜப்பான், அமெரிக்கா,
பிரான்ஸ், ஜெர்மனி
தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. முன்னதாக இதுதொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜெட்ரோ, யுஎஸ்ஐபிசி அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு ஜெட்ரோ (ஜப்பான் எக்ஸ்டர்னல் டிரேட் ஆர்கனைசேஷன்), யுஎஸ்ஐபிசி (யுஎஸ் – இண்டியா பிசினஸ் கவுன்சில்) தோக்ரா (கொரியா டிரேட் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரமோஷன் ஏஜென்சி) ஆகிய அமைப்புகள் தமிழக அரசுடன் பங்குதாராக (பார்ட்னர்) இணைந்து செயல்படும்.
மேலும் சிஐஐ, எப்ஐ, சிசிஐ, அஸ்சோசாம், எம்சிசிஐ ஆகிய முக்கிய தொழில்துறை சங்கங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும் உத்தேசித்துள்ளது.
பிரைஸ் பாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் (பியுசி) இந்த மாநாட்டுக்கு ‘அறிவுசார் பங்குதாரர்’ (நாலெட்ஜ் பார்ட்னர்) ஆக செயல்பட தேர்வு செய்யப்பட்டள்ளது.
மேலும் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழ்நாடு தொழிற்துறை வழிகாட்டு ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு மையம் (கைடன்ஸ் பீரோ) மாநாட்டுக்கு செயலாளராக (செகரட்டேரியில்) செயல்படும்.
உற்பத்திக்கு உலகளவில் உன்னத இடம் தமிழகம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழிற்துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் உற்பத்தித்துறையில் சர்வதேச அளவில் உன்னத இடத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுக்கும் தமிழ்நாடு முன்னோடி என்பதை நிரூபிக்கும்.
இத்தகைய மாநாடுகள் மூலம் அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும்.
தமிழக அரசு இனறு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.