Nov 17, 2014

மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் வடக்கு தொகுதி மேற்குப்பதி அசோகபுரத்தில்

வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்குடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெ.அய்யாசாமி, ஜெகநாதன் உளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.