Nov 17, 2014

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காலை 7.45 மணி முதல் 12.30 மணி வரை மகா யாகம் நடைபெற்றது .ஜெயதுர்கை அம்மனுக்கு 108 சுமங்கலிகள் கலந்து கொள்ளும் பூஜை நடைபெற்றது .108 கோ பூஜை ,ஸ்ரீ கஜ பூஜை ,ஸ்ரீ அச்வ (குதிரை) பூஜை மற்றும் 108 சிவசாரியர்கள் பங்கேற்று 9 லட்சம் ஆவர்த்தி ஜவம்,9 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .இந் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அமைச்சரின் துணைவியார் ஜெயந்தி செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் பங்கேற்றனர் ..