Nov 10, 2014

tirupur msm ananthan minister news







Nov 9, 2014

மக்கள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்காமல் உயிர் நீத்த 6 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினர்.

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கி கொள்ள இயலாமல் அகால மரணமடைந்த திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம், வெள்ளசெட்டிபாளையத்தைச் சேர்ந்த எம்.பழனியின் மகன் சண்முகத்திடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், உடுமலையை அருகே உள்ள நரசிங்கபுரம்பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க.பிரமுகர் என்.வீரமணி என்பவர்  தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையையும், மடத்துக்குளம் தொகுதி, உடுமலை ஒன்றியம், தும்பலப்பட்டியைச் சேர்ந்த பி.கருப்புசாமி என்பவருக்காக அவருடைய மனைவி மஞ்சுளாவிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையையும், உடுமலை தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்பாயத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பானுமதியிடம் ரூ.3 லட்சம் உள்ளிட்ட 6 குடும்பங்களுக்கு அண்ணா தி.மு.க.சார்பில் ரூ.18 லட்சத்தை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்,கேபிள் டி.வி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி.,சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நகராட்சி துணை தலைவர் எம்.கண்ணாயிரம் ஆகியோர் வழங்கினர்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்லடம் பரமசிவம் எம்.எல்.ஏ.,அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ப.நடராஜன், தமயந்தி மாசிலாமணி, வாசுதேவன்,,மாவட்ட இணைசெயலாளர் ஜோதிமணி, மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி, குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, உடுமலை நகரமன்றத் துணைத்தலைவர் எம். கண்ணாயிரம், பல்லடம் வைஸ் பழனிசாமி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் மாசிலாமணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, கரைபுதூர் ஏ.நடராஜன், கே.ஆர்.பி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மயில்சாமி, நந்தகுமார், திலீப்குமார் பனியன் துரை மற்றும் அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Nov 8, 2014

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்
திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள காரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தது மரணம் அடைந்தார்.
ராமசாமி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மேயர் ராஜன்செல்லப்பா உள்பட மாநிலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
இதில் சிறுபான்மை பிரிவு ஜான்மகேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், யூனியன் சேர்மன்கள் திருச்செல்வம், தமிழழகன், மகாலிங்கம், நகர செயலாளர்கள் விஜயன், நாகராஜன், நெடுமாறன், துணை சேர்மன்கள் பாவடியான், சதீஷ் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதிமுக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

 
மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு மனமுடைந்து அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவின் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார் .உடன் கழக நிர்வாகிகள் ..

பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் மலிவு விலை காய்கறிகள் ரூ.14 கோடிக்கு விற்பனை: அமைச்சர் தகவல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறையால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 210 மருந்தகங்களுடன் நடப்பு ஆண்டில் புதியதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, தற்போது 17 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த 100 மருந்தகங்களுக்கும் கட்டமைப்பு வசதிக்காக ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனையில் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 53 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 31 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 2.11.2014 வரையில் 48,45,104 கிலோ டன் காய்கறிகள் ரூ.13.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோட்ட பயிரிடுவோருக்கு கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக ரூ.147.08 கோடி அளவிற்கு காய்கறி சாகுபடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Nov 7, 2014

திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையத்தில் 67 பயனாளிகளுக்கு

ரூ.8.57 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், உதவி கலெக்டர் செந்தில்ராஜன்,  ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.சாமிநாதன்,  வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், ஊராட்சி தலைவர் மூர்த்தி, கூட்டுறவி சங்க தலைவர் சுலோச்சனா வடிவேல், நிர்வாகிகள்  ஏ.டி.பி.சுப்பிரமணியம், வேலுசாமி மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி வீதிக்காடு எஸ்.எஸ்.நகரில் சட்டமன்ற உறுப்பினர்

வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,உதவி செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,ஊராட்சி தலைவர் செல்வகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்பாளையம் புதூரில்

ரூ.14.95 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், திருப்பூர் உதவி கலெக்டர் செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார் பொன்னுலிங்கம் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகி வி.எம்.கோகுல், ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.