Nov 7, 2014

திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்பாளையம் புதூரில்

ரூ.14.95 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், திருப்பூர் உதவி கலெக்டர் செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார் பொன்னுலிங்கம் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகி வி.எம்.கோகுல், ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.