Sep 23, 2014

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை



வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1993-1994-ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று என் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், வருமான வரித்துறை உதவி கமிஷனர் கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அந்த கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு, அதற்குரிய அனைத்து வகை வரி, கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த தயாராக உள்ளதாக கூறி கடந்த ஜூன் 25-ந் தேதி வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில், கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, என்னுடைய கோரிக்கை மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என்று என் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதன்பின்னர் இந்த காலஅவகாசம் செப்டம்பர் 6-ந் தேதி வரை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளிவைக்க கூடாது’ என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவியல் விசாரணை முறை சட்டம் 313-ன் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக அக்டோபர் 1-ந் தேதி தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவு சட்டப்படி ஏற்கமுடியாதது. அதை ரத்து செய்யவேண்டும். வருமான வரித்துறை சட்டம் பிரிவு 279(2)-ன் படி, வருமான வரி கணக்கு செலுத்தாதபட்சத்தில், அதற்குரிய கட்டணத்துடன் அனைத்து தொகைகளையும் செலுத்தலாம். எனவே அவ்வாறு சமரச மனு தாக்கல் செய்து கட்டணம் செலுத்த எனக்கு உரிமை உள்ளது.

ஆனால், இவற்றை விசாரணை கோர்ட்டு நீதிபதி கவனிக்க தவறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கீழ் கோர்ட்டு நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.

ஆனால், வருமான வரித்துறைக்கு நான் கொடுத்துள்ள சமரச மனுவினால், இந்த வழக்கின் நிலை மாறி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவை கீழ்கோர்ட்டு நீதிபதி பரிசீலித்து இருக்கக்கூடாது. மேலும் என்னுடைய சமரச மனுவை, (மனு கொடுத்த நாளில் இருந்து) 180 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சட்டம் கூறுகிறது.

எனவே, இந்த சூழ்நிலையில், என்னை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது அரசியல் சட்டத்துக்கும், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது செயலாகும்.

எனவே, வருமான வரி வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 18-ந் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனுக்களை சசிகலாவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அம்மா உணவகத்தில் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: சென்னையில்முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள கஸ்தூர்பா மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது உணவகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை தட்டில் வைத்து ருசி பார்த்துச் சாப்பிட்டார். சரி.



Sep 20, 2014

கீழணை & வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க, ஜெயலலிதா உத்தரவு




சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
 
கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்குச் சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து  தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 
 
இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்க உத்தரவு!

23THJAYA_1307669f


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறந்து விட தான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பாசனத்துக்காக வீராணம் ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு


வீராணம் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.21) முதல் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று கீழணை, வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கோவையில் இடைதேர்தல் மோதல்: அதிமுக எம்எல்ஏ உள்பட175 பேர் மீது வழக்கு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவையில் மேயர் இடைதேர்தல் மோதல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ. வேட்பாளர் உள்பட 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பா.ஜ. மேயர் வேட்பாளர் நந்தகுமார் நேற்று முன்தினம் தனது கட்சியினருடன் கோவை சவுரிபாளையம் மாரியம்மன் கோயில் மைதானம் அருகே காரில் சென்றார். அப்போது அங்கே தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி தலைவரின் கார் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த நந்தகுமார் மற்றும் கட்சியினர், வெளியூர்காரர்கள் தேர்தல் விதிமுறை மீறி தங்க கூடாது என்றனர்.இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாஜகவினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக  துடியலூர் டி.வி.எஸ் நகரை சேர்ந்த பா.ஜ., இளைஞரணி செயலாளர் கார்த்திக்கை (25) போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் மீதும் பொது சொத்துக்கு சேதம்  ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் நந்தகுமார் தந்த புகாரின் பேரில் போடிநாயக்கனூர் நகராட்சி சேர்மன் பழனிசாமி உள்பட 50 பேர் மீதும், பாஜக மாவட்ட துணை தலைவர் தாமு கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு பாரதி நகரை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சின்னச்சாமி உள்பட 50 பேர் மீதும், பீளமேடு அதிமுக 65வது வார்டு அவை தலைவர் ஜெயகோபால் கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 25 பேர் மீதும், சவுரிபாளையம் தேர்வீதி அதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என மொத்தம் 175 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ சாமியாத்தாள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தினால்தான் எஸ்.ஐ. மாற்றப்பட்டார் என்று பாஜகவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாமியாத்தாள் இட மாறுதலுக்கான முறையான உத்தரவு இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது

Sep 18, 2014

அம்மா நிரபராதி"... காஞ்சிபுரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு




காஞ்சிபுரம்: பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா நிரபராதி என்று குறிப்பிட்டு காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பேனரை வைத்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் எனபவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்து வருகிற 27ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதனால் அதிமுக தரப்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு காணப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் அதிமுகவின் அம்மா பேரவை துணைச் செயலாளர் பரிமளம் என்பவர் ஒரு பேனரை வைத்தார். அதில் அம்மா நிரபராதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் பரிமளத்தை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Sep 17, 2014

காட்டு யானை, எருமை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி



காட்டு யானை, எருமை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நெருப்புக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு காப்புக் காட்டுக்கு அருகே ஆந்திர மாநிலம், மிட்டாமீடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்டரெட்டி ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியும், கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், அய்யர்பாடி தேயிலைத் தோட்டம் அருகே காட்டெருமை தாக்கியதில் சோமசுந்தரம் என்பவரும் உயிரிழந்தனர். இந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு வனத் துறை மூலம் தலா ரூ.3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Sep 16, 2014

புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்: கோவை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா உறுதி


தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் (18-ந் தேதி) இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.

இதற்காக சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு வந்தார். அங்கு அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் கார் மூலம் அருகில் உள்ள கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அங்கு நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ’’இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தங்களுக்குள்ள பலத்தை சோதித்துப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் தேசிய கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன. சுயேச்சை வேட்பாளர்களுக்கோ அல்லது தேசிய கட்சிகளுக்கோ வாக்களிப்பதனால் உங்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.

பொதுவாக தேசிய கட்சிகளின் சிந்தனை எல்லாம், டெல்லியை, மத்திய அரசை சுற்றித் தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்கிற போது, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களைப் பற்றியா தேசிய கட்சிகள் கவலைப்பட போகின்றன?

இந்திய நாட்டை பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தமிழர்களின் உரிமைகளை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. ஏனென்றால், அவர்கள் பல மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

உதாரணத்திற்கு காவேரிப் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சினையில் மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இன்னமும் நியாயம் வழங்கவில்லை. இதற்கு காரணம் என்ன? கர்நாடகாவிலே பாரதீய ஜனதா கட்சிக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், கர்நாடக மக்கள் தங்களுக்கு எதிராக போய்விடுவார்களோ என்ற பயம் பாரதீய ஜனதா கட்சியினரிடம் இருப்பது தான் இதற்குக் காரணம்.

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனுக்களை தற்போதைய மத்திய பாரதீய ஜனதா அரசு இன்னமும் மாற்றவில்லை. இதனை தமிழக பாரதீய ஜனதா கட்சியினரால் தட்டிக் கேட்க முடிந்ததா? இல்லையே!


இதே போல் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நண்பர்களும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என்றால் தமிழக கம்யூனிஸ்டு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கேரளா கம்யூனிஸ்டு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய கம்யூனிஸ்டு கட்சியினரோ மவுனமாக இருப்பார்கள். தேசிய கட்சிகளால் மாநில பிரச்சினைகளிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது என்னும் போது; மாநிலத்தில் உள்ள மாநகராட்சியின் பிரச்சினைக்கு அவர்களால் எப்படி தீர்வு காண முடியும்?

பாரதீய ஜனதா கட்சிக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்கள். இதை மறைக்க ஆளும் கட்சியின் மீது தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


காவேரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் உச்ச நீதிமன்றம் மூலம் போராடி வெளியிடச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டிய அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க முந்தைய மத்திய அரசு முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்திய அரசு, உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

இப்படி, எந்த மக்கள் பிரச்சினையானாலும் அதனை எதிர்கொண்டு அதில் வெற்றி காணக் கூடிய ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான்.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதிகளின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அளித்து இருக்கிறோம்.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நாங்கள் செய்து தந்துள்ளோம். இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் குறு சிறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கியுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரத் துறையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது.


கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவன்றி நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் மூலம் இன்னும் ஒரு சில மாதங்களில் 737 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது.

1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு, இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 463 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும். இது தவிர, 2014-2015 ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. இவற்றின் மூலம் 230 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்க இருக்கிறது.

இது தவிர 3,330 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு பெறத் தக்க வகையில் நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.  இதில் 224 மெகாவாட் மின்சாரம் தற்போது பெறப்பட்டு வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மெகாவாட்டாக உயரும்.

மொத்தத்தில் 2014-2015 ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்திற்கு கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருக்கிறது. இதையும் சேர்த்து கூடுதலாக 5,723 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கச் செய்வதற்கு எனது தலைமையிலான அரசு வழி வகுத்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஏற்படுத்தப்பட்ட மின் வெட்டு சமீப காலம் வரை நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்த போதும், கோயம்புத்தூர் மாநகரம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநகரம் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கு மின்வெட்டு இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன்.

எனது தலைமையிலான அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அறவே நீக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 106 நாட்களில் 97 நாட்கள் மின் தடை ஏதுமின்றி தமிழகம் எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதாவது, 2010-11 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 208 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் எனது ஆட்சியில், நடப்பு ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 267 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.


உங்கள் அன்புச் சகோதரியின் அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை மனதில் நிலை நிறுத்தி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கோயம்புத்தூர் மாநகராட்சி இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ‘இலையின் தொடர் ஆட்சி கோவை மாநகராட்சியில்’ என்பதை நீங்கள் நிலைநாட்டிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர், கோவை மாநகராட்சியின் வார்டு உறுப்பினராகவும், வடக்கு மண்டலக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். உங்களின் அன்றாடத் தேவைகளையும், உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர். இவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார், உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைபாடுகளை அறிந்து, உங்கள் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.

எனவே, உங்கள் பொன்னான வாக்குகளை, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னத்தில் செலுத்தி அன்புச் சகோதரர் கணபதி ப.ராஜ்கு மாரை கோவை மாநகர மேயராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்’’என்று கூறினார்.