Sep 23, 2014

அம்மா உணவகத்தில் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: சென்னையில்முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள கஸ்தூர்பா மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது உணவகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை தட்டில் வைத்து ருசி பார்த்துச் சாப்பிட்டார். சரி.