Mar 23, 2021

திருச்சி அதிமுக வேட்பாளர் நொச்சியம் பகுதியில் பிரச்சாரம்

 திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி


நொச்சியம் அதன் பகுதிகளில் பிரச்சாரம் முதல்வர் எடப்பாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்

காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்

கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்

விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்

சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்

கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்

உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்


மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


மேலும் அவர் கூறுகையில் தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் வருவார்கள் போவார்கள். பணத்தை மட்டுமே நம்பி அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்கள் . நான் மக்களாகிய உங்களை நம்பி வந்திருக்கிறேன். மக்களுக்காக நான் பணியாற்றியதால் 5வது முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது போட்டியிடுகிறேன். அதிமுக எனக்கு இத்தனை வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு எனக்கு என்ன பலம் என்று கேட்டால், தொண்டர்களுடன் நான் நெருங்கி பழகுவதே என் பலம். பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதுதான் எனது பலம். கோடிக்கணக்கான பணத்தை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வந்துள்ள எதிர்கட்சி வேட்பாளரையும் என்னையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்காக பணியாற்றுபவர் யாராக இருக்கும் என்று சீர்துாக்கி பாருங்கள். என்னை எளிதில் நீங்கள் அணுக முடியும். எதிர்கட்சிகாரர்களின் காம்பவுண்ட் கேட்டை கூட நீங்கள் நெருங்க முடியாது. இப்பகுதியில் குடியிருக்கும் நரிகுறவர்களுக்கு பட்டா வழங்கிட முயற்சி செய்வேன். என்று அவர் பேசினார்.


பிரச்சாரத்தின் போது மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் அமைச்சருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி மற்றும் திருப்பஞ்சலி கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள்

ஜெயக்குமார், ஆதாளி ஆமூர் ஜெயராமன், நகர செயலாளர் சம்பத் துரை, ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், நாகமணி, திருப்பஞ்சலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன், கல்பான ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், சிறுவளை ஊராட்சி மன்ற தலைவர் லதா, கதிர்வேல் கொரியர் சரவணன், எதுமலை விமலா, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெற்றிச்செல்வி மற்றும் கூட்டணி கட்சிகளான கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.