Dec 1, 2014

திருப்பூர் அ.தி.மு.க.சார்பில் பெருமாள் கோவிலுக்கு ரூ.5 லட்சம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நன்கொடையாக ரூ.5 லட்சத்து ஆயிரத்தை மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.
இதில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும், துணை மேயருமான குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், சோமசுந்தரம், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், சவுமீஸ் நடராசன், பலராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.