Dec 1, 2014

திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் அடுத்துள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில்



திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அண்ணா திமு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்க சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது மாவட்டபேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  அரசு கேபிள் டி,வி, நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ஒன்றிய பேரவை செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி மயில்சாமி, உடுமலை நகரமன்ற துணைதலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்