Showing posts with label திருச்சி சித்ரகுப்தன். Show all posts
Showing posts with label திருச்சி சித்ரகுப்தன். Show all posts

Mar 28, 2024

திருச்சி அஇஅதிமுக பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம்


 திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவுடன் களமிறங்கிய வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக அறிமுக கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பகுதி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Oct 23, 2022

அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்

 


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர்

திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி அவர்கள் போதாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்.   


Feb 14, 2022

அதிமுக சார்பில் 43 வார்டில் போட்டியிடும் ஆர்.பி கணேசன் அவர்களுக்கு மக்கள் வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் RP. கணேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கணேசன். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 43-வது வார்டுக்குட்பட்ட முருகன் கோவில் தெரு, காந்தி தெரு, காவேரி நகர், யமுனா புரம், ராஜ வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் வெங்கடேஷ், ஐயப்பன், சிவா, ஆறுமுகம், ராஜேந்திரன், கண்ணுச்சாமி, திருஞானம், சாந்தி, சித்ரா, புருசோத்தமன், கந்தசாமி, மனோகரன், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், நந்தகுமார், கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.ரவி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.ரவி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் ரவி. மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முப்பத்தி ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் நகரில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பொய்கைக்குடி முருகா, எம்.ஏ.காமராஜ், வெண்ணிலா சேகர், ஜமால் பாத்திமா, பாலகிருஷ்ணன், மணிகண்டன், ரபீக், செலின், நாகமணி, மஞ்சு,ஜமால், சேட்டு, எஸ்.மணி, A. துரை, தனபால், ராஜா, அண்ணாதுரை, BHEL பாலு, அடைக்கல சாமி, M. லோகேஷ், கார்த்திக், தமிழரசி, மதியழகன், ஜோசப் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.