Feb 14, 2022

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.ரவி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.ரவி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் ரவி. மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முப்பத்தி ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் நகரில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பொய்கைக்குடி முருகா, எம்.ஏ.காமராஜ், வெண்ணிலா சேகர், ஜமால் பாத்திமா, பாலகிருஷ்ணன், மணிகண்டன், ரபீக், செலின், நாகமணி, மஞ்சு,ஜமால், சேட்டு, எஸ்.மணி, A. துரை, தனபால், ராஜா, அண்ணாதுரை, BHEL பாலு, அடைக்கல சாமி, M. லோகேஷ், கார்த்திக், தமிழரசி, மதியழகன், ஜோசப் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.