Feb 14, 2022

அதிமுக சார்பில் 43 வார்டில் போட்டியிடும் ஆர்.பி கணேசன் அவர்களுக்கு மக்கள் வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் RP. கணேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கணேசன். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 43-வது வார்டுக்குட்பட்ட முருகன் கோவில் தெரு, காந்தி தெரு, காவேரி நகர், யமுனா புரம், ராஜ வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் வெங்கடேஷ், ஐயப்பன், சிவா, ஆறுமுகம், ராஜேந்திரன், கண்ணுச்சாமி, திருஞானம், சாந்தி, சித்ரா, புருசோத்தமன், கந்தசாமி, மனோகரன், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், நந்தகுமார், கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.