Jan 6, 2020

திருச்சி பூலோக வைகுண்டத்தில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 5, 2020

திருச்சி பிரம்மாண்டமாக அரசு பொருட்காட்சி துவக்கம்

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.


இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.


அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.


இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dec 24, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளரும்  முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சண்முகா நகர்  மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் 


திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில் நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்

இந்நிகழ்வின் போது ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிப் பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்


Dec 23, 2019

திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி அதிமுக வேட்பாளர் கார்த்தி வாக்கு சேகரித்தார்




திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 6 இல் போட்டியிடும் கார்த்திக்  அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏராளமான கழக தொண்டர்கள் மகளிர் அணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம்

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்


நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்



Dec 22, 2019

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜார்ஜ் தீவிரப் பிரச்சாரம்

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  அதிமுக சார்பில் ஜார்ஜ் என்பவர் போட்டியிடுகிறார் அவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பகுதிகளான சுற்றுவட்டார பகுதிகளில் ஜார்ஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்



அப்போது அவர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவே அம்மா ஆட்சியில் நான் இப்போது போட்டியிடுகிறேன் நான் ஜெயிப்பேன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்திடுவேன் என்றும் நான் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்

Dec 21, 2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...

மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.