Dec 22, 2019

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜார்ஜ் தீவிரப் பிரச்சாரம்

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  அதிமுக சார்பில் ஜார்ஜ் என்பவர் போட்டியிடுகிறார் அவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பகுதிகளான சுற்றுவட்டார பகுதிகளில் ஜார்ஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்



அப்போது அவர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவே அம்மா ஆட்சியில் நான் இப்போது போட்டியிடுகிறேன் நான் ஜெயிப்பேன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்திடுவேன் என்றும் நான் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்

Dec 21, 2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...

மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Jul 19, 2019

திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


                    
திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது



                      

அப்போது முன்னாள் டாஸ்மார்க் தொழிற் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கூறுகையில்அ அம்மாவின் ஆட்சியில் அம்மாவினால் 33 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற்றார்கள்ம்மா  தற்போது அண்ணன் எடப்பாடி யார் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ஊதிய உயர்வு  பெற்றுள்ளது இதுபோன்ற தொடர்ச்சியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் 





Jun 22, 2019

ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்கா




திருச்சி ஹோண்டா டூ வீலர் இந்தியா திருச்சியில் புதிதாக குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையுடன் இணைந்து இந்நகரின் முதல் போக்குவரத்து பூங்காவை தொடங்கி இருக்கிறது



சாலைகளை பயன்படுத்துவர்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போட்டுப் அவர்களிடையே விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்காவை தொடங்கியுள்ளது

ஹோண்டாவின் 14வது போக்குவரத்து பயிற்சி பூங்கா தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருப்பத்தூர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்யூனிகேஷன் பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஹோண்டா டூவீலர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது

Jun 10, 2019

Jun 1, 2019

திருச்சி தனியார் பேருந்துகள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - 31.05.2019

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.




கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.


ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.