Mar 2, 2015

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.

Displaying IMG_7060.jpg





திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், கவுன்சிலர் ஆனந்தன், சிலவர் வெங்கடாச்சலம், சண்முகசுந்தரம், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் சுல்தான்பேட்டை நொய்யல் ஒட்டணையில் அணைக்கட்டு, வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.









திருப்பூர் சுல்தான்பேட்டை நொய்யல் ஒட்டணையில் அணைக்கட்டு, வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், கவுன்சிலர் ஆனந்தன், சிலவர் வெங்கடாச்சலம், சண்முகசுந்தரம், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Feb 28, 2015

செக்கானூரணியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டை பொதுவாக வரவேற்கிறேன்!- இது ஜெயலலிதா!
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி செக்கானூ ரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பாசறை மாவட்ட செயலாளர், ஆலங்குளம் செல்வம், பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருப்பரங்குன்றம் ஓன்றிய அவைத்தலைவர் சந்தனத் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் உள்பட 67 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து செக்கானூரணி பஸ்நிலையத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், விவசாயபிரிவு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவி பஞ்சவர்ணம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் போத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி அ.இ.அ.தி.மு.க மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்

 ஸ்ரீரங்கத்தில் ராமச்சந்திர மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
ஸ்ரீரங்கதில் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் துவங்கிய இந்த முகாம் நாளையும்  நடைபெறுகிறது. இந்த 2 நாள் முகாமில் மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆனந்தன்,முடங்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துறை குமார், துணை மருத்துவ தலைவர்கள் டாக்டர் சுகாஸ் பிரபாகர், டாக்டர் மோகன் சௌத்ரி உள்ளிட்ட    மருத்துவர்களும், துணை மருத்துவர்களும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், சரும நோய், காது மூக்கு, தொண்டை, இதய நோய், முடக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பல் நல துறை உள்ளிட பல மருத்துவ துறைகளில் இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்க படுகிறது.
முகாமில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்ய ஆவன செய்ப்படுகிறது.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, 2 டி எக்கோ அல்ட்ரா சவுண்டு போன்ற பரி சோதனைகள் அவசியத்தின் பேரில் இலவசமாக செய்யபடுகிறது. சில மாத்திரைகள் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது. 

Feb 27, 2015

Feb 26, 2015

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது  பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, ஆனந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்.பி.,என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கீதா, சண்முகசுந்தரம், ரத்னகுமார், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் முதல் பூஜையாக ஜெயலலிதா பெயரில் மகா பூஜை செய்யப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதற்காக 67 தேங்காய்கள், 67 வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜா, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பசுமலை கூட்டுறவு சங்க தலைவர் ஐ.பி.எஸ். பாலமுருகன், மதுரை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் வக்கீல் முனியாண்டி, கவுன்சிலர்கள் முத்துக்குமார், சந்தியா பலராமன், நகர தலைவர் ராசு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், நகர செயலாளர்கள் பாலமுருகன், பன்னீர் செல்வம், மரக்கடை முருகேசன், பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் தெய்வம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகராஜன், மகாதேவன், மாயி, பேரவை துணைத் தலைவர் ஒச்சாத்தேவர், சுமதி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநகர் 8–வது பஸ் நிறுத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.
திருநகர்– தனக்கன்குளம் பிரிவில் உள்ள பாலர் இல்ல மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உணவு வழங்கினார். தனக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் கருத்தக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் செல்லக்கண்ணு, வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், கோபால், சூரி, விளாச்சேரி பஞ்சாயத்து துணைத்தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட 67 இடங்களில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க.வினர் ஏழைப் பெண்கள் 67 பேருக்கு இலவச சேலைகளை வழங்கினர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தலைமைக் கழகத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு திரண்ட மகளிரணியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதுதவிர அனைத்து பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு வகையில் பிறந்தநாள் விழாவை அந்த வகையில், மதுரை மாநகர் 1-வது வார்டு கூடல் நகரில் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.தனபாலன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் 67 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. இதுதவிர ஆயிரம் பேருக்கு சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குண்டுசேகர், சண்முகம், கே.மாரியப்பன், சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்