Nov 4, 2014

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அருகே உள்ள நரசிங்கபுரம்பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க.பிரமுகர்

என்.வீரமணி என்பவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜெயலலிதா உத்திரவின் பேரில் அண்ணா தி.மு.க.தலைமை கழகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ,ஜெயராமன் வீரமணியின் துணைவியார் கலாமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.கள் சி.சண்முகவேலு, கே.பி.பரமசிவம், மகேந்திரன் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நகராட்சி துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, நகர செயலாளர் சாமராயம்பட்டி எஸ்.ராஜ்குமார், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேந்திரன்,குமேரேசன் மற்றும்  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு வழங்கினர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் வேலுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி ஆகியோர் உள்ளனர். 

Nov 3, 2014

Photo

Photo

Photo

Photo

Nov 2, 2014

திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர், அக்கரை செங்கப்பள்ளி கிளை அ.தி.மு.க., செயலாளர் வரதைய்யகவுடர், மக்கள் முதல்வர் அம்மாவின் தீர்ப்பை கேட்ட அதிர்ச்சியில்

உயிரிழந்தார். அம்மா அவர்கள் உத்தரவுப்படி வரதைய்யகவுடரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஆதிராஜாராம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்கள். உடன் அவினாசி எம்.எல்.ஏ.,அ.அ.கருப்பசாமி, திருப்பூர் துணை  மேயர் சு.குணசேகரன், அந்நூர் ஒன்றிய செயலாளர் .காளியப்பன், நகர செயலாளர் சவுகத்  அலி, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழு  தலைவர் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்




மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சி.கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மணி, மார்க்கெட்  சக்திவேல்,சடையப்பன், கோகுல், ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் போஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரை அடுத்துள்ள உடுமலைப்பேட்டை தொகுதியில் உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 1012 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, தாசில்தார் சைபுதீன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.