Nov 3, 2014

Photo

Photo

Photo

Photo

Nov 2, 2014

திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர், அக்கரை செங்கப்பள்ளி கிளை அ.தி.மு.க., செயலாளர் வரதைய்யகவுடர், மக்கள் முதல்வர் அம்மாவின் தீர்ப்பை கேட்ட அதிர்ச்சியில்

உயிரிழந்தார். அம்மா அவர்கள் உத்தரவுப்படி வரதைய்யகவுடரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஆதிராஜாராம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்கள். உடன் அவினாசி எம்.எல்.ஏ.,அ.அ.கருப்பசாமி, திருப்பூர் துணை  மேயர் சு.குணசேகரன், அந்நூர் ஒன்றிய செயலாளர் .காளியப்பன், நகர செயலாளர் சவுகத்  அலி, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழு  தலைவர் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்




மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சி.கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மணி, மார்க்கெட்  சக்திவேல்,சடையப்பன், கோகுல், ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் போஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரை அடுத்துள்ள உடுமலைப்பேட்டை தொகுதியில் உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 1012 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, தாசில்தார் சைபுதீன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Nov 1, 2014

திருமங்கலத்தில் கல்லூரி அமைய இருக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

திருமங்கலத்தில் கல்லூரி அமைய இருக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
திருமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் டாப்கோ நிறுவனத்திற்கு சொந்தமான, செயல்பாடின்றி உள்ள 11.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக்கல்லூரிக்கான கட்டிடம் கட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரசு கலைக்கல்லூரிக்கான இடத்தில் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் பழனியப்பன் வலியுறுத்தினார்.
இதில் யூனியன் சேர்மன்கள் தமிழழகன், மகாலிங்கம் தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் விஜயன், துணை சேர்மன்கள் சதீஷ்சண்முகம், பாவடியான், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர் பாண்டி, ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், நகர துணை செயலாளர் ராஜாமணி உள்பட உயர்கல்வித்துறை அதிகாரிகள், கட்டுமான பிரிவு அதிகாரிகள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்











மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் மற்றும் ஆத்திகுளம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் பணி மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பணியை, மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:–
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளும் நோய் தடுப்பு சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலை உள்ள காரணத்தினால் தடுப்பு பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்ற முறை டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில் இம்முகாம் நடத்தப்படும். அதனடிப்படையில் வார்டு எண்.7 செல்லூர் மற்றும் வார்டு எண்.48 ஆத்திகுளம் ஆகிய வார்டுகளில் பொது மக்கள் நெருக்கமாக உள்ளதால் மதுரை மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார பணியாளர்கள் ஆசிரியர் கள் சுயஉதவி குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என 550 பேர் வார்டுக்கு 10 குழுக்கள் வீதம் 20 குழுக்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு வீடுகளுக்கு உட்புறம் மற்றும் வெளிபுறப்பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்குரிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், நிலவேம்பு பொடி வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்பணி இப்பகுதிகளில் இன்றும் நாளையும் மேற் கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக முழு கவனம் செலுத்தி ஒழிப்புபணி மேற்கொள்ளப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 2012 ஆம் ஆண்டு 857 நபர்களுக்கும், 2013 ஆம் ஆண்டு 57 நபர்களுக்கும், காணப்பட்டது.
தற்போது 2014 ஆம் ஆண்டு 14 நபர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளது டெங்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடாந்து நடைபெறும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிலவேம்பு பொடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஆணையாளர் கதிரவன், துணை மேயர் திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையாளர்கள் குணாளன், தேவதாஸ், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற உறுப்பினர் முத்துராஜா, சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், செவிலியர்கள், அபேட் மருந்து ஊற்றும் பணி யாளர்கள் மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.