Oct 7, 2014

கடையடைப்பு-வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கடையடைப்பு-வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது உள்ள அன்பால், பாசத்தால், மாறாப் பற்றால் மக்களும், சில அமைப்புகளும் தாங்களாகவே உணர்ச்சிவயப்பட்டு நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப் பேசுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, கடந்த 40 மாதங்களாக அதைச் செயல்படுத்தியும் காட்டினார். அவரது வழியில், வளர்ச்சித் திட்டங்கள் மக்களை சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 

இருப்பினும், தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய ஜெயலலிதாவின் 2023 தொலைநோக்குத் திட்டம், 2014 ஆம் ஆண்டைய தொழிற் கொள்கை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை அடைவதற்கான வழியில் தமிழகத்தில் உள்ள அமைப்புகளும், சங்கங்களும், மக்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழவேண்டாம் என்றும் தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவே அவருக்கு நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல் ஆகும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

Party Treasurer & Hon'ble CM Arikai on 7.10.2014


Oct 5, 2014

60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 4வது மண்டலம் 56வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி தலைமையில், மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி முன்னிலையில் 60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில், குமரன் மகளிர் கல்லூரி தலைவர் வசந்தி, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்  ஆகியோர் ராமூர்த்தி, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ்,பூபதி, ரவிச்சந்திரன் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரசுதன், பழனிசாமி, தவசிமுத்து ஆகியோர் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள்



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம்  தலைமையில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை ஏ.எஸ்.தங்கவேலு, முன்னால் கவுன்சிலர் உமாதேவி,கிளை துணை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மண்ணரை பஸ் நிறுத்தம் அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 21வது வார்டு சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அமுதா வேலுமணி தலைமையில், மண்ணரை ஊராட்சி கழக செயலாளர் வேலுமணி, கிளை செயலாளர் பழனிசாமி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலையில் கே.எஸ்.தியேட்டர் எதிரில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

உண்ணாவிரத போராட்டம்

 
 
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்துமீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,ஊராட்சி கழக செயலாளர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் ஊராட்சி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.