Oct 3, 2014

அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மேடை ஏற்றி இருக்கிறது அம்மா வின் சிறைவாசம் !!!!


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில்  அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மீண்டும் மேடை ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் 

மதுரை மாவட்ட அதிமுக சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்திட அதிமுக சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 1 வது வார்டு கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் கண்ணீர் மல்க பிராத்தனை செய்தார் .அதிமுக மகளிர் அணியினர் ,துணை மேயர் திரவியம் ,பொருளாளர் ராஜா ,எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எம் எஸ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்

மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் அளித்துள்ள சிறை தண்டனையை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் ஜெயக்கொடி ,ஜெயபால் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்

மஹா வேள்வி யாகம்.

சைதை பகுதி மடுவங்கரை மக்கள் சார்பில் அஇஅதிமுக பொதுசெயலாளர் விடுதலை பெற மகா யாகம் நடைபெறுகிறது. இதில் மதவேறுபாடு இன்றியும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.