Mar 13, 2016

திருச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநிலசெயற்குழுக்கூட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்கா ஆட்சி நடத்தியவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஜனாப். இடிமுரசு இஸ்மாயில் புகழராரப்பேச்சு.

திருச்சி 13.3.16
திருச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநிலசெயற்குழுக்கூட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்கா ஆட்சி நடத்தியவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஜனாப். இடிமுரசு இஸ்மாயில் புகழராரப்பேச்சு.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயற்குழுகூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ள ராஜா கார்டன் ஹோட்டல் ஹாலில் மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது பேசிய அவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 5ஆண்டு நல்லாட்சி புகழ்மிக்க பொற்கால ஆட்சி நடந்துவருகிறது கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி முற்றிலும் கிடையாது ஒழிக்கப்பட்டு விட்டது ஜாதிபெயரை சொல்லி புகார்  கொடுத்து பணம் பறித்தல் கிடையாது ஜாதிகலவரம் கிடையாது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது ஆகையால் அம்மா எங்களுக்கு கூட்டணியில் தொகுதி கொடுத்தாலும் சரி  இல்லையென்றாலும் மீண்டும் அம்மா ஆட்சி மலர பாடுபடுவோம் என்று மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடலூர் ஹாஜி பக்ருதீன் திருச்சி மாவட்ட செயலாளர் ஹனீப் ஆகியோர் முன்னிலை வகுத்தனர் மாவட்;ட தலைவர் அரப் ஜான் வரவேற்புரையாற்றினார் மாநில மாணவர் அணி தலைவர் ஆரி புல்லா நன்றி கூறினார்.