Jan 20, 2015

திருப்பூரில் எம்.ஜி.ஆரின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ விசாலாட்சி தலைமையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பின்னர் அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு திரண்டிருந்த அண்ணா தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றரை கோடி தொண்டர்களையும், இந்த நாட்டையும், நம்மளையும் வாழவைத்து அழகு பார்க்கும், எப்பொழுதும் அண்ணா தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி வரும் ஜெயலலிதா அவர்களை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் மகத்தான மக்கள் சக்தியுடன் மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல்,அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,4-வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ்.பழனிசாமி, உகாயனூர் ஊராட்சி தலைவர் பழனிசாமி, மகளிர் அணி சித்ராதேவி, தம்பி மனோகரன், வளர்மதி கருணாகரன், அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார்,ராஜேஷ்கண்ணா, எஸ்பி.என்.பழனிச்சாமி, டி.பார்த்தீபன், ஹரிஹரசுதன், கவுன்சிலர்கள் செல்வம்,புலவர் சக்திவேல் சின்னசாமி, வேலுசாமி, ராஜகோபால், பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், லோகநாதன்,பரமராஜன், நகர நிர்வாகிகள்  ரத்னகுமார், மாணவரணி மாரிமுத்து,மயில்ராஜ், வளர்மதி கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சாகுல்அமீது, ராயபுரம் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், கிளை செயலாளர் விவேகானந்தன்,ஹனிபா, மூர்த்தி, பனியன் சங்க குணசேகரன்,கேபிள் பாலு,பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, நீதிராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.மில் தேவராஜ், வினோத்குமார்,முபாரக், சி.டி.சி.அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார், சிவகுமார், மாரிமுத்து, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் வேங்கை விஜயகுமார், பாரதிபிரியன், சாரதா மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநகர் பகுதியில் உலா 60 வவார்டு கிளை சார்பில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்க்கபப்ட்டன.98 லிட்டர் பால் வழங்கும் விழா:- 
        திருப்பூர் 31-வது  வார்டு வாலிபாளையம் கிளை கலக்கம் சார்பில் மற்றும் கே.பி.என்.காலனி முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 98 பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு பால் வழங்கியும், பொங்கல் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பி.கே.எஸ்.சடையப்பன், வெங்கிடுபதி, கிளைசெயலாளர் ரவிகுமார், மோகன், கிருஷ்ணன், பாலன், வேலாயுதம், வெங்கடேஷ், சந்தானம்,, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், தாமோதிரன், உண்ணி கிருஷ்ணன், சிவக்குமார், சதீஷ், சிவசக்தி, கதிரேசன்,  சசிகுமார், மகேந்திரன், லட்சுமணன், நிவேந்திரன், நிவாஸ்,மணிகண்டன், பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.