Dec 7, 2014

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்துள்ள காட்டூர் வெள்ளநத்தத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழுத்தலைவர்கள் எஸ்.சிவாச்சலம், எம்.கே.ஆறுமுகம், திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் சா.பாபு, துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகவேல், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.