Mar 5, 2018

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

திருச்சி       

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Mar 3, 2018

திருச்சி 3.3.18 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்

திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.


திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்  வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர் குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Oct 5, 2017

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே தீராம் பாளையத்தில்ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விதைப்பந்து தயாரித்தல் பணி

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  தீராம் பாளையத்தில் உள்ள காந்திய நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் 2லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தீராம் பாளையம் காந்திய நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து விதைப்பந்து தயாரித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 


(விதைப்பந்து என்பது மர செடி விதைகளை செம்மண் உருண்டை செய்து அதன் நடுவில் வைத்து அதைபந்து போல் உருட்டி வைத்து அதனை நம் நினைக்கும் இடத்தில் வீசி விட்டால் மழை காலத்திலோ அல்லது அதன் மீது தண்ணீர் பட்டாலோ அந்த விதை முலைத்து விடும்) அதே போன்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து மாணவ மாணவியர்க்கு பேனா பென்சில் வைக்க பர்ஸ் வடிவமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் திருமலைராஜ், முன்னால் துணை ஒன்றிய தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கோபி கிருஷ்ணன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தங்கரமேஷ் ,முனைவர் அருண் பிரகாஷ் கலந்து  கொண்டனர்.                 


பேட்டி ... முனைவர் அருண் பிரகாஷ்
பேட்டி ... மாணவி யோக லெட்சுமி

Sep 4, 2017

திருச்சிபூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

திருச்சி                                                                                      

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்கார தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்
கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட  ஆட்சியர் கு.ராசா மணி துவக்கி வைத்தார்.
மேலாளர் கங்காதேவி உடன் இருந்தனர் -


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கொலு
கண்காட்சியானது  இன்று முதல் வரும் 7ம் தேதி வரை  நடைபெறுகிறது
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கொலு செட்டுகள் கொண்ட பள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், மண் மற்றும் பளிங்கு, மாக்கல், நவரத்தின கற்கலால் ஆன பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தசாவதார, அஷ்டலட்சுமி செட், கார்த்திகை பெண்கள் செட், விநாயகர், மகாலட்சுமி மற்றும் முருகர், கீதா உபதேச செட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
மேலும் கல்கத்தா, மணிப்பூர் ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் வீடுகளில் கொலு வைப்பதற்கு வாங்கிச் சென்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது



பேட்டி  : இராசாமணி - மாவட்ட ஆட்சித் தலைவர்

Aug 31, 2017

திருச்சி 31.8.17 பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு


திருச்சி 31.8.17
பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை  அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு 

திருச்சி அஇஅதிமுகாவி;ல்புதிதாக  டிடிவி.தினகரானால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதில் பேசிய முன்னாள் தலைமைகொறாடாவும் தற்போது  மாவட்ட செயலாளருமான மனோகரன் கூறிய போது தற்போதைய ;முதல்வர் அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பாஜாகவின் காலடியில் அரசையும் அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர் என்றார்.
தியாகசின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களை அறிவித்தார் அதன் படி நாங்கள் முதல் முறையாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரவுள்ளோம் எ ன்பதை அறிந்த உள்ளுர் அமைச்சர்கள் ஆர்டிஓ மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஏவி எங்களை மிரட்டி தடுக்க முயற்சி செய்ய பார்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
டிடிவி. தினகரன் தலைமையில் திருச்சி என்றும் அவர் பின்னால் இருந்து வெற்றியை பெற்று தருவோம் என்பதை நாங்கள் கூறுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் கழகஅமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான்கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மனோகரன்

Aug 27, 2017

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

தினகரன், சசிகலா ஆகியோர் செல்லாக்காசுகள் என்று எம்பி குமார் கொடுத்த பேட்டிக்கு கண்டனம். நாங்கள் இதுவரை பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம்.  பொறியாளர் கலியப்பெருமால் வீட்டிற்கு உதவியாளராக வந்தவர் குமார். கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். யார் யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தயக்கம் காட்டவில்லை

ஊழல் ஆட்சி நஞைபெறுகிறது என மக்கள் உணர்கிறார்கள். கூடிய விரைவில் ஆட்சியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவிற்கு இருந்த பாதுகாவலர்கள் எடப்பாடி க்கும் பணிபுரிகிறார்கள். அம்மா-வை போலவே நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்பி குமார் சின்ன பையன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
22 எம்எல்ஏக்கள் உங்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யுங்கள். முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார் முதல்வர். வெல்லமண்டி நடராஜன் எங்கள் கோஷ்டியில் இருந்தால் பதவி போகும் என்ற பயத்தில் பேசிக்கொண்டுள்ளார்.
தினகரனின் உருவபொம்மையை எரிக்க காவல்துறை அனுமதி கொடுக்கிறது. தவறான பாதையில் காவல்துறை செற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நம்பி யாரும் இறங்காதீர்கள்.
இந்த அரசு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும்.
இக்கட்சியை டில்லியில் இருந்து ஒரு முதலாளி இயக்க முயற்சிக்கிறார். விலைபோய்விட்டார்கள். 11 துரோகிகளை கூடே இணைத்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். சசிகலா இதுவரை யாரையும் தவறாக பேசவில்லை. சிறையில் இருக்கும் போது கூட எடப்பாடி குறித்து நலம் விசாரித்து வருகிறார். - புகழேந்தி
 கமல்ஹாசனுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடுகின்றனர். கவர்னர் பதில் அளித்துவிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இலீலை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
 சசிகலா உதவி இல்லையென்றால் இன்று எம்பி குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. 2006 க்கு பிறகு தான் குமார் கட்சிக்கு வந்தார். தினகரனையும் சசிகலாவையும் செல்லாத நோட்டுகள் என்று கூறியவர் கள்ளநோட்டு. - முன்னாள் கொறடா மனோகரன் பேட்டி
  ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சூட்கேசுடன் ஓடிவிடுவார்கள்.கட்சியை டிடிவி தான் காப்பாற்றுவார்-புகழேந்தி

Aug 15, 2017

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்குஇந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று 15.08.17-ம் தேதி காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் சுதந்திர தின விழாவில்
வழங்கினார்.

மேலும்திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு.மு.அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.மு.அங்குசாமி ஆகியோர்களுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி மாநகர காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமைக் காவலர் 2517 திரு.N.கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் 2810 திரு.வு.அருள் முருகானந்தம் ஆகியோர்களுக்கும் முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்தமைக்காக திருச்சி கைவிரல்ரேகை பதிவுக்கூடத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.ளு.ராதாகிரு~;ணன்கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கு.இருதயராஜ் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் 2872 திரு.ளு.சேகர் மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் 936 திருமதி.ஆ.வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் 2793 திரு.மு.வெங்கடே~;பாபு முதல்நிலைக் காவலர் 2113 திரு.ளு.சுந்தரமூர்த்தி ஆகியோர்களுக்கு முதலமைச்சரால் அண்ணா பதக்கம் சென்னையில் இன்று 15.08.2017-ம் நடைபெற்ற சுதந்திர விழாவில் வழங்கப்பட்டது.

Aug 10, 2017

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி



திருச்சியில் கதர்ஆடையை பிரபலப்படுத்தும்வகையில் விசைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார், ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.

கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணியவேண்டும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறது, இதனடிப்படையில் திருச்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர் வாங்குவோர் சந்திப்பு மற்றும் விசைத்தறி ஆடைகள் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பங்கேற்று தொடங்கிவைத்து, கதர்ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். இதில் 15அரங்குகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் கதர்ஆடை நெசவாளர்களின்; ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு ரகத்தினாலான உடைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயனுறும்வகையில் உற்பத்தி விலைக்கே நேரடி விற்பனை செய்யப்படுவதால், இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான ஆடை ரகங்களை தேர்வுசெய்துவருகின்றனர்.