Showing posts with label திருச்சி சபரிநாதன் 944308 6 297. Show all posts
Showing posts with label திருச்சி சபரிநாதன் 944308 6 297. Show all posts

Jan 5, 2020

திருச்சி பிரம்மாண்டமாக அரசு பொருட்காட்சி துவக்கம்

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.


இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.


அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.


இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dec 24, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளரும்  முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சண்முகா நகர்  மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் 


திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில் நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்

இந்நிகழ்வின் போது ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிப் பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்


Dec 23, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம்

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்


நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்



Jan 27, 2019

திருச்சி ஸ்ரீரங்கம்ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா



ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். 



ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்

Mar 17, 2018

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் , வளர்் மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார், தலைமை மருத்துவர்ககள் சம்சத் பேகம், அனிதா சித்த மருத்துவர் காமராஜ் மற்றுும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்