Mar 15, 2021

திருச்சி அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 திருச்சி

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.



ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்



தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது

பின்னர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் டைமன் திருப்பதி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்