Mar 15, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார்

 திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் அதிமுக திமுக கழக தொண்டர்கள் பனையபுரம் கண்ணன் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி பகுதி கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்