Showing posts with label நகராட்சி. Show all posts
Showing posts with label நகராட்சி. Show all posts

Oct 16, 2015

விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றார் ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’


விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.

பொறுப்பு ஏற்றார்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இவர் மாவட்ட செயலாளர் ஆவது இது 2வது முறையாகும். மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அருப்புக்கோட்டை வைகைசெல்வன், விருதுநகர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

சாதாரண தொண்டன்

சமானிய குடும்பத்தில் பிறந்து எளிய தொண்டனாக அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டேன். திருத்தங்கல் பேரூராட்சி செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் கட்சி பணியாற்றிய என்னை அமைச்சராகவும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழகு பார்த்தார். உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சி பணியாற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தால் அதற்குரிய இடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார் என்பதற்கு இதுவே உதாரணம்.

7 தொகுதிகளிலும் வெற்றி உறுதி

என்னை இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து கட்சி பணியாற்ற முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாய்ப்பு தந்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட கட்சி பணியாற்றுவேன். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கொடி நாட்ட அனைவரும் அயராது பாடுபட வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி நிர்வாகி சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், இணை செயலாளர் ரமாதேவி குருசாமி, மகளிர் அணி செயலாளர் கவுரி நாகராஜன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி (சாத்தூர் கிழக்கு), தேவதுரை (மேற்கு), மயில்சாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்), சங்கரலிங்கம் (அருப்புக்கோட்டை), ராமமூர்த்தி ராஜ் (காரியாபட்டி), குருசாமி (ராஜபாளையம் மேற்கு), பூமிநாதன் (நரிக்குடி), முத்துராமலிங்கம் (திருச்சுழி), அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா, நகர செயலாளர் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேஷா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்தங்கல் சென்று அங்குள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.

Aug 22, 2015

இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்: வைகைசெல்வன் அறிக்கை

இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்: வைகைசெல்வன் அறிக்கைமுதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இளங்கோவன் தொடர்ந்து அ.தி.மு.க.வையும், புரட்சித் தலைவி அம்மாவையும் பேசி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக வந்த எவரும் இவ்வளவு கொச்சைத்தனமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் பேசியது இல்லை. ஆனால், இந்த இளங்கோவன் தலைவராக வந்தது முதல் பிரேக் இல்லாத தண்ணி வண்டிபோல் ஓடிக்கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே பொறுத்துக் கொள்ளாமல் கட்சியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்திபவன், அரசியலில் கையேந்திபவனாக மாறி விட்டது. மாநிலத் தலைவர் பதவி என்பது, ஒரு நியமன பதவி, அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்ட இளங்கோவனால், ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்துவிட்டது போல பேசுவது என்பது, பிரேத பரிசோதனை முடிந்துவிட்ட பிணத்திற்கு உயிர் வந்து விட்டது என்பது போலத் தான் இருக்கிறது.
இந்திய பிரதமர் அவர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும் மனசாட்சியில்லாமல் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்களே? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிற உங்கள் பேச்சை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இளங்கோவன் மன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்

Jul 16, 2015

பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த 4,448 பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி:வைகைசெல்வன் எம்.எல்.ஏ.வழங்கினார்

Image result for முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்
பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த 4,448 பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி:வைகைசெல்வன் எம்.எல்.ஏ.வழங்கினார்
பாலையம்பட்டி பகுதியை சேர்ந்த பயனாளிகள் 4,448 பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.டி.ஒ. சுபாநந்தினி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், யூனியன் சேர்மன் யோக வாசுதேவன், தொகுதி செயலாளர் முத்துராஜா, தாசில்தார் ரெங்கசாமி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 4448 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
அருப்புக்கோட்டை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஒன்றியங்கள் அடங்கியுள்ளது. நிறைவாக அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலையம்பட்டியில் கொடுக்கப்பட உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் கிடைக்க வேண்டும், எந்த திட்டமும் பயனாளிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என கண்ணும் கருத்துமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பார்த்து வருகிறார்.
மேலும் அருப்புக்கோட்டை நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் வரும் 2 மாதகாலத்திற்குள் விலையில்லா பொருட்கள் வழங்குவதற்க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் பணம், ஆடு, மாடுகள், 16 அம்ச திட்டத்தை பள்ளி கல்வித் துறைக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்து வழங்கக்கூடிய ஒரே முதல்வர் ஜெயலலிதா. இவரது திட்டங்களை பார்த்து பல்வேறு மாநில முதல்வர்கள் செயல் படுத்தினார்கள், அவர்களால் நீடித்து கொண்டு செல்ல முடிய வில்லை. ஒரு திட்டத்தை தீட்டினால் அது முழுமையாக சென்றடைவதற்க்குரிய ஆற்றல், திறமை, நிர்வாக ஆளுமை பெற்ற முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார்.
எனவே பயனாளிகள் விலையில்லா பொருட்களை பெற்று என்றென்றும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலு சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் வீரகணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கொப்பையராஜ், முருகேசன், பாலையம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி, இயக்குநர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, துணை தலைவர் மீனாட்சி துரைராஜ், ஊராட்சி செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்