Feb 3, 2015

திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி


திருப்பூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் 1965ம் ஆண்டு ஜன.,25ம் தேதி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டத்தில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று மாநகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், துணை மேயர் குணசேகரன்,  மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், வெளியங்கிரி, அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், என்பிஎன்பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், யுவராஜ் சரவணன், மாரிமுத்து, மயில்ராஜ், ரஞ்சித் ரத்தினம்,ராஜ்குமார், அசோக்குமார், பரமராஜன், அன்பரசன், அய்யாசாமி, கண்ணப்பன், டி.டி.பி.தேவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் புலுவபட்டி பாலு, செல்வம், புலவர் சக்திவேல், சண்முகசுந்தரம், சண்முகம் ஆனந்தன் உள்ளிட்டவர்கள், முன்னாள் கவுன்சிலர் கேசவன், சிட்டி பழனிசாமி, விவேகானந்தன், வினோத்குமார், பிரிண்டிங் மணி, சுபாஷ், பேபி பழனிசாமி  சரவணன், முகவை கண்ணன் உள்ளிட்ட தலைமை கழக பேச்சாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டானர்.