Nov 1, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையானதற்கு நேர்த்திக்கடன் செலுத்தியும்





மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கருவம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மற்றும் அக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், தண்ணீர் ஊற்று விநாயகர், முருகன்,சிவன்,கன்னிமார்,துர்கையம்மன்,நவக்கிரகம்,துவாரபாலகர் ஆகிய கோவில்களில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைக்கு  துணை மேயர் சு.குணசேகரன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எம்.மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், நிலைக்குழு தலைவர் பூலுவபட்டி பாலு, கருணாகரன்,சாகுல்அமீது, ராஜேஷ்கண்ணா, மாரிமுத்து, மயில்ராஜ், பி.பார்த்திபன், கவுன்சிலர்கள்  சண்முகசுந்தரம், கணேஷ் மற்றும் கோகுல், யுவராஜ் சரவணன், சடையப்பன்,பிரிண்டிங் மணி,பொன்.மருது, நீதிராஜன், முன்னாள் கவுன்சிலர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோமதி சம்பத், பஸ் ஸ்டாண்ட் சந்திரன்,ஆண்டிபாளையம் செல்வராஜ், சுபாஷ் மற்றும் மகளிர் அணியினர்கள்ஆகியோர் உள்பட பாலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகிகள் மைடி பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தசாமி,சி.டி.சி.பொன்னுசாமி,கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், உதவி குருக்கள் வெங்கடேஷ்,ரகுநாதன் ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோர்களை  வரவேற்றனர்.பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.