Apr 8, 2019

ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு சேகரித்தார்சரஸ்வதி

ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து டி ஆர் சரஸ்வதி ஸ்ரீரங்கத்தில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், திமுக அதிமுகவிற்கு இல்லாத  தில் டிடிவி தினகரனுக்கு உண்டு. கழகத் துணை பொதுச்செயலாளர் வீடு உறவினர்கள் வீட்டில் எல்லாம் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்.அப்பொழுது என்னை 20 வருடம் சிறையில் அடைத்தாலும் 21 வது வருடம் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார். பதவிக்காக கூனிக்குறுகி காலில் விழும் துரோகிகள் முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் இன்று பேசுகின்றார்கள். இத்தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறும் தேர்தலாகும். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இவர்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இவர்கள். நாங்கள் பதவிக்கு அலையல பணத்துக்கு அலையல அதனால நாங்க அண்ணன் டிடிவி பக்கம் இருக்கின்றோம் ராஜகோபுரம் முன்பிருந்து ராஜவம்சத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானுக்காக பரிசு பெட்டகத்தில் வாக்கு சேகரித்து பேசுகின்றேன். ஆண்டவன் முன்பிருந்து பேசுகிறேன் .சிந்தித்துப் பாருங்கள் அம்மாவை சட்டசபையில் நாக்கு துருத்தி பேசியவர்கள் அம்மாவின் சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மானம் இருக்கா வெட்கம் இருக்கா தூன்னு துப்பல என்று கூறியவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைத்து விட்டு இப்பொழுது வாக்கு சேகரிக்க வருகின்றார்கள் .இது துரோகம் இல்லையா ஆண்டவனும் அம்மாவும் எங்க பக்கம் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் என்று ராஜகோபுரம் முன்பிருந்து ராஜ வம்ச சாருபாலா தொண்டைமானுக்கு சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார் பகுதி செயலாளர் இளையராஜா மகளிரணி செயலாளர் சித்ரா விஜயகுமார் ஒன்றிய செயலாளர் வாசு உட்பட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்

திருச்சி சாருபாலா தொண்டைமான் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம்

திருச்சி பாராளுமன்ற அமமுக வேட்பாளர் அம்மா சாருபாலா தொண்டைமான் திருச்சி மேற்க்கு தொகுதிக்குவுட்பட்டபகுதிகளில் சூராவளி பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறார்


திருச்சி பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்

திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்

திருச்சி மேற்கு தொகுதி, ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட கருமண்டபம் , ராம்ஜி நகர்,பிராட்டியூர் ,கொத்தமங்கலம  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,



திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு J. சீனிவாசன்,

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் M.S. ராமலிங்கம்,,ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் R.R.தன்சிங் ,மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Apr 6, 2019

திருச்சி மக்கள் வெள்ளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்

பட்டி தொட்டி எல்லாம் பரிசுப் பெட்டகம் தான் ட்ரெண்டிங்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காந்தி சந்தையில் மகளிர் அணியினர் செண்டை மேளம் முழங்க பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர். கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள் காந்தி சந்தையில் பிரச்சாரம் முடித்து உறையூரில்


 திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில்,
சோழ மன்னர்களின் தலைநகராம் உறையூர். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக இருந்தவர். நிதி ஆதாரத்தை 40 கோடியாக உயர்த்தியவர் , பாதாள சாக்கடை திட்டம், நடைபாதை, சாலையோர பூங்கா உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்தியவர். இவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் விரிவாக்கம், நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவார். மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுஅவர்களுக்கு நமது துரோகிகள் துணை போகிறார்கள். வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றி இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். தேசிய கட்சியை நம்பி எந்த பயனும் இல்லை. அம்மா காவிரி மேலாண்மையை கூட நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற்றவர். நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ள இயற்கை செல்வங்களை எடுக்கின்றார். அனைத்து இயற்கைச் செல்வங்களையும் எடுத்தால் விளைநிலங்கள் எல்லாம் பொட்டல் காடாக மாறி சோமாலியா நாடாக முயற்சிக்கின்றார்கள். மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்கள் .ஆனால் ஒரு கோடி பேருக்கு கூட கொடுக்கவில்லை. மேலும் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் மக்களை வஞ்சித்து விட்டார் .இதனால் தொழில் புரிபவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 6 லட்சம் குடும்பத்தினர் நடுத்தெருவில் உள்ளார்கள். இன்று அனைத்து துறையிலும் பின்தங்கி உள்ளோம். அடிமை அரசின் கையாலாகாத் தனத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம். நமக்கு சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது சின்னம் வழங்க உத்தரவிட்டது. 36 சின்னங்களை கொடுத்தார்கள். அதில் ஸ்க்ரூ ட்ரைவர், டூத் பேஸ்ட் ,செருப்பு என்று பல்வேறு சின்னங்கள் இருந்தன. ஆனால் தெரியாமல் பரிசுப்பெட்டகம் சின்னமும் அதில் இருந்தது. உடனே அம்மா தாய் சேய் திட்டத்திற்கு வழங்கிய பரிசு திட்டம் நினைவுக்கு வந்தது. உடனே பரிசு பெட்டக சின்னத்தை பெற்றோம். இன்று பட்டி ,தொட்டி எல்லாம் பரிசு பெட்டகம் தான் ட்ரெண்டிங். நமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க தேவையில்லை மக்கள் தான் அங்கீகாரம் தர வேண்டும் .இங்கே தினம் ஒரு கட்சியில் இருந்து தற்போது காங்கிரஸில் போட்டியிடுகிறார் . வாக்கு சேகரிப்பு கூட்டத்திலும் தூங்கி விடுகின்றார். இவர் திகழ்கிறார் வில் சேர்ந்து விடலாம். வாக்காளப் பெருமக்கள் திருச்சியின் வெற்றி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கூறினார்.

மாநகர செயலாளர் சீனிவாசன் இணைச்செயலர் சேட், லதா, sdpi மாநகர செயலாளர் ஹஸன், அமமுக திருச்சி அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ,ராஜா, உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலாளர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் ஒரு மலைப்பகுதி செயலர் சங்கர் தில்லை நகர் பகுதி செயலாளர் இப்ராஹிம் பிச்சை வழக்கறிஞர் மணிவண்ணன் மகளிரணி செயலர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநில மாநகர பகுதி வட்டக் கழக சார்பில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.

Mar 31, 2019

திருச்சி உறையூர் முஸ்லிம் தெருவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் தரிசித்துவிட்டு திருச்சி பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சார்பான தொண்டைமான் பிரச்சாரம்



இஸ்லாமியர்களின் பாதுகாவலராய் உள்ள அமமுக விற்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்  செய்யுங்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து உறையூர் முஸ்லிம் தெருவில்
sdpi கட்சி செயலர் ஹசன் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக பாசிச ஆட்சி கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளுக்கு மத்திய அரசுகள் இன்றும் அமல்படுத்தவில்லை அதனால் சிறப்புக்குழு அமைத்து சட்ட அங்கீகாரம் அளித்து இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் வக்பு சொத்துகள் மீட்கப்படும் ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் இமாம்கள் துணை இமாம்கள் மாத வருமானம் ரூபாய் 40,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். மாறி மாறி ஆண்டவர்கள் இஸ்லாமிய நலன் காக்கும் வகையில் செயல்படவில்லை இஸ்லாமியரின் பாதுகாவலராக இருக்கக் கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெருவாரியான வாக்குகளை பரிசு பெட்டியில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

Mar 29, 2019

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரம்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்



பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா கோபுரத்தின் முன்பிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரத்தை துவங்கி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பக்த கோடிகளுக்கு அன்னதானம் யாத்ரிநிவாஸ் சட்டக்கல்லூரி வண்ணத்து பூச்சி பூங்கா மாணவர்களுக்கு கல்லூரி என இத்தொகுதிக்கு அவர் நல்ல பல திட்டங்களை வழங்கி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் எனக்கு பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தெற்கு உத்திர வீதி மேற்கு உத்தர வீதி வடக்கு உத்திர வீதி கிழக்கு உத்திர வீதி தெற்கு சித்திரை வீதி மேற்கு சித்திர வீதி வடக்குச் சித்திரை வீதியில் கிழக்குச் சித்திரை வீதி அடையவளஞ்சான் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்கள்
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பரிசு பெட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி

பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின்  39 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் , 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. பொது சின்னமாக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை கேட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தினகரன்  உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அமமுக தரப்புக்கு  நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Mar 28, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தர்காவில் வழிபாடு

நத்தஹர்வலி தர்காவில் வழிபட்ட அமமுக வேட்பாளர்

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் வலி தர்காவில் நத்தர் அவர்களின் கலீபா அப்துர் ரகுமான் சித்தீகி அவர்களும், வளர்ப்பு மகள்  ஹலீமா என்ற மாமா ஜிக்னியும், நத்ஹர் அவர்களின் கால்மாட்டிலும், ஷம்ஸ் கோயான் அமைச்சர் கீழ்புறத்தில் மற்றொரு அமைச்சரான ஷம்ஸ்பீரான் அடக்கம் பெற்றுள்ள இடத்தில் வழிபாடு செய்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அடங்கப் பெற்று உள்ள இடத்திற்கு வெளியே நின்று வழிபட்டு மயிலிறகால் மதிக்கப்பட்டது



மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பச்சை நிற போர்வையை போற்றி மலர்கள் தூவி வழிபட்டார்.



அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச் செயலர் சிறுபான்மை பிரிவு செயலர் நத்தர்ஷா பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆண்டவர் jeeyar இடம் ஆசிர்வாதம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ஆண்டவர் jeeyar ஆசீர்வாதம்அ ம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்



 ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவராஹ மகாதேசிகன் சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் கழக அமைப்புச் செயலாளர் மனோகரன்  உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

அதிமுக நிர்வாகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஐக்கியம்

அதிமுக நிர்வாகி அமமுகவில் ஐக்கியம்

அஇஅதிமுக திருச்சி மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ஜான்கென்னடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இணைந்தார். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் அவைத்தலைவர் ராமலிங்கம் துணைச் செயலர் சேட் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மோகன் தாஸ் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.