Oct 16, 2018

திருச்சி உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்

Oct 12, 2018


Oct 7, 2018

திருச்சி சுகாதாரத்துறை அமைச்சர்வி ஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி_07.10.18

திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று  ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

Oct 5, 2018

திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி :



திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி-05.10.18

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.

Sep 25, 2018

மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி

மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் 

Sep 19, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் கண்காட்சி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்

திருச்சி – 18.09.18

 
       



திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.

முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.
                 


தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

Sep 18, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காட்சியை திறந்து வைத்தார்

திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:

                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Sep 7, 2018

திருச்சி பூம்புகார் விற்பணை நிலையம் கணபதி தரிசனம் சிறப்பு கண்காட்சி

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
             


  பூம்புகார் விற்பனை நிலையம்இ திருச்சி- 8
           

 கணபதி தரிசனம் – சிறப்பு கண்காட்சி


      ஐங்கரன்இ ஆனைமுகத்தோன்இ கஜேந்திரன்இ விக்னேஸ்வரன்இ கணபதிஇ பிள்ளையார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர்இ கடவுளின் மூலக் கடவுள் என்றும் போற்றப்படுபவர்இ நம் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர். விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்இ வினையை அகற்றுபவர் என்று பொருள். நம் வாழ்விலும் பல இன்னல்கள்இ கஷ்டங்கள்இ தீராத வினைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை அகற்றும் கடவுள் நம் விநாயகர். இவரின் பண்டிகையை தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று அழைத்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.  
இவர் கலைகளின் கடவுளாகவும் ஞானத்தின் கடவுளாகவும் வணங்கப்படுவார்இ. இந்த விநாயகர் பல வடிவங்களில்இ பல அவதாரங்களில் கணபதியாக தோற்றம் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்சிக் கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புது டெல்லிஇ கொல்கத்தாஇ உட்பட அனைத்து விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுஇ மற்றொருவித வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி சிங்காத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம்இ 06.09.2018 முதல் 15.09.2018  வரை (ஞாயிறு உட்பட) கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி ஒன்றை தன் விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது.
இக்கண்காட்சியினை திரு.யு.ளு.சமது யுபுஆ (ர்சு) டீர்நுடுஇ  திருச்சி அவர்கள் வியாழன் கிழமை அன்று துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.