Showing posts with label trichy sabarinathan. Show all posts
Showing posts with label trichy sabarinathan. Show all posts

Aug 3, 2017

திருச்சி 02.08.17ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு

திருச்சி             02.08.17  

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு .



திருச்சி ரயில்வே ஜங்சன்  நடைமேடை (பிளாட் பார்ம்) டிக்கெட் ரூபாய் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய  வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் (TTV தினகரன் ஆதரவாளர் ) ராஜராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு .தமிழகத்தில் மிக முக்கியமான நகரம் இது பாரம்பரியமான இரயில்வே ஸ்டேஷன். இங்கு அதிகபடியாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக வருகின்ற இடம் வயதானவரை விடுவதற்குக்கும் மற்றும் பள்ளிக்கு குழந்தை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவி கலைவிடுவதற்கும் அவர்களது தாய்மார்கள் வந்து பிளாட்பாரத்தில் விடுவதன் அவசியம் உள்ளதாலும் இதனை மனதில் கொன்று பிளாட்பார்ம் விலையினை குறைக்க வேண்டும்



திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் திமுக எம்பி சிவா ஆகியோர் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என  குற்றச்சாட்டு தெரிவித்தார்.

திருச்சி மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று திருச்சி ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்ற

மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது



தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.



2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்



4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்




5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது

Jul 31, 2017

திருச்சி 30.7.17 திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

திருச்சி 30.7.17

திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் சோமரசம் பேட்டையில் நடைபெற்றது
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அம்மாவழியில் நடக்கும் நம் தலைவரும் கூடிய விரைவில் முதலவர் நாற்காளியில் அமரப்போகும் ;அண்ணன்ஒபிஎஸ் அவர்கள் தலைவர் எம்ஜிஆர் மீது அவளவற்ற பற்று கொண்டவர் என்பதன் உதராணம் ஒன்று கூறுகிறேன் தலைவர்100 ஆண்டு விழாவை வழியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படம் பதித்த நாணயம் வெளியிட வழியுறுத்தி பாரத பிரமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணன் ஒபிஎஸ் என்றும் மீண்டும்ஒரு உதாரணம் அண்ணன் ஒபிஎஸ் விரைவில் முதல்ஆகிறார்என்பதற்;கு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல்களாம் அவர்களின் நினைவிடத்திற்கு வந்த பாரதபிரதமர் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் ஒபிஎஸ் அவர்களை சந்தித்து 15 நிமிடம் பேசியுள்ளார் அதன் எதிரொலி அண்ணன் ஒபிஎஸ் விரைவில் தமிழக முதல்வர் ஆகப்போகிறார் என்பது கூடிய விரைவில் n தரியும் என்றார்
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பூனாட்சி அம்மா வழியில் ஒபிஎ ஸ் அண்ணன் அவர்களுக்கு வழுசேர்க்கும் அளவிற்கு கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி வழுசேர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்மற்றும் பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் முன்னாள்அமைச்சர்கள் பரஞ்சோதி பூனாட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினாகள் மற்றும் மகளிர் அணி சார்பில் முன்னாள் மறைந்தஅமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி மரியம் பிச்சை ஸ்ரீரங்கம் பகுதி பிரேம் ஆனந்த்ääசெல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2017

திருச்சி – 25.07.17 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது

திருச்சி – 25.07.17

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார். இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி இன்று மாலை ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின்;போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார். வஸ்திரமரியாதை யாவும் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இதனை எடுத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பேட்டி : திரு.சுந்தர்பட்டர் - ஸ்ரீரங்கம்கோவில்

Jul 23, 2017

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 22.07.2017(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  விழாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் துறை இயக்குநர் முனைவர்   எ. இளையபெருமாள் பல்கலைக்கழக தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 13 மாணவ மாணவியருக்கு பட்டம் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ்விழாவில்; 962 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசியதாவது:  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்;களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் 60மூ பேர் மட்டுமே தேர்வுளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்கள் வாழ்க்கை விதத்தையும் வேலை வாய்ப்புகளையும் மற்றும் சமுதாய சிந்தனையும் கொண்டு வாழ வேண்டும் என வலியுத்தினார். தேர்வுகளை எதிர்கொள்ளும் 60மூ மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தார். அதில் முதல் 20மூ பேரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு எழுதுவது என்று கூட தெரியாதவர்கள் அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்;த 20மூ பேர்; படிப்பு சார்ந்த அறிவு சிறிதுமின்றி தங்கள் துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலைக்கு செல்கின்றனர். கடைசி 20மூ பேர் நல்ல அறிவுத்திறன்இ தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறந்த வேலையை பெறுகின்றனர். ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் எண்ணமும் என்னவெனில் எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் அதிகார மிடுக்கோடும் ஆளுமைதிறனோடும் வாழவேண்டும் என்பதே ஆகும். மேலும் தன்னுடைய உரையில் அறிவும் திறமையும் பெற்றிருந்தால் இந்த உலகமே உங்களுடையது என்றார்.  
சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்;க்கையே உதாரணமாக மாணவர்களிடையே கூறி சாதனையாளர்கள் அனைவருமே வசதியான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் அல்லர். பெரும்பான்மையான சாதனையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மற்றும் நல் அறிவும் போதுமானவை ஆகும். 
இன்றைய மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கும் தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உங்கள் பெற்றோர்களையும்  நீங்கள் கல்வி பயின்ற கல்வி கூடங்களையும் மறந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாவச்செயல் என்றார். தன்னுடைய உரையை இறுதியாக ஒரு தமிழ் கவிதையுடன் அழகாக முடித்தார். 
அக்கவிதை “அரிது அரிது மானிடராதல் அரிது… எனக்கூறி அப்பேர்பட்ட மானிடப்பிறப்பை பெற்ற நாம் அதன் கடமையை செவ்வேனே செய்வோம் என மாணவர்களை வாழ்த்தி தன் சிறப்பு உரையை இனிதாக முடித்தார். பட்;டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Jun 27, 2017

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம்,அமைசர் தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு உள்ளிட்ட சுமார் 2 .50 கோடி செலவிலான பூஜை பொருட்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 370 கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது.

அறிஞர் அண்ணா காலத்தில் தலைமை, தலைவர் என்ற பதவி இல்லை.
அதனை உருவாக்கியவர் கலைஞர் தான். அமைச்சர்
வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி -
தற்போதைய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு

Sep 24, 2016

திருச்சி மக்களின் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய சிறப்பு பூஜைகள் மற்றும் அண்ணதானம் நடைபெற்றது

திருச்சி 24.9.16   
திருச்சி மக்களின் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய ஸ்ரீனிவாசன் மாநகராட்சி துணை மேயர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்தலைமையில் பாலக்கரை ரெட்டைபிள்ளையார் கோயில் கார்த்திகேயன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தலைமையில் புத்தூர் தௌரபதி அம்மன்கோயில் பத்மநாதன்  மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அண்ணதானம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மநாகர் மாவட்ட செயலாளர்   வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை   நலத்துறை அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் வளர்மதி; ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்


திருச்சி மக்களின் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய சிறப்பு பூஜைகள் மற்றும் அண்ணதானம் நடைபெற்றது

திருச்சி 24.9.16   
திருச்சி மக்களின் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைய ஸ்ரீனிவாசன் மாநகராட்சி துணை மேயர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்தலைமையில் பாலக்கரை ரெட்டைபிள்ளையார் கோயில் கார்த்திகேயன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தலைமையில் புத்தூர் தௌரபதி அம்மன்கோயில் பத்மநாதன்  மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அண்ணதானம் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மநாகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் வளர்மதி; ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Sep 18, 2016

திருச்சி 18.09.2016 தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருச்சி 18.09.2016 

தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாசுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவானைக்கோவில் .கே.திருமண மஹாலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு விமரிசையாக  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் ஆகியோர் இன்று (18.09.2016) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி  அவர்கள்ää நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல்ää  திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் குமார்ää  மாநகராட்சி மேயர் ஜெயாää மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரிமுருகன்ää மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜாத்திää மாநகராட்சி துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
மாவட்ட அளவில் சமுதாய வளைகாப்பு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர்  விழா பேருரையில் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக கருவுற்ற தாய்மார்களுக்கு 16 வகையான அம்மா குழந்தைநல பரிசுப் பெட்டகம் வழங்கியுள்ளார்கள். மகப்பேறு காலத்தில் 3 தவணையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கருவுற்ற பெண்களுக்கு குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்காக ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பணியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு காலவிடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில்  இம்மாவட்டத்தில் உள்ள 12227 அங்கன்வாடி மையங்களில் கர்ப்பணி பெண்களுக்கு இணைஉணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பணி பெண்களுக்கு பாதுகாப்பான தாய்மை கர்ப்ப கால பராமரிப்பு பாலூட்டும் தாய்க்கான பராமரிப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்ப்பகாலத்தில் தேவையான மருத்துவ உதவிகள் கர்ப்பகால பரிசோதனைகள் தடுப்ப10சிகள்ää இரும்பு சத்து மாத்திரைகள் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநல உதவி திட்ட தொகை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறந்த பேறுகால  சிகிச்சை அளிக்க ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் அம்மா பெட்டகம் மருத்துவமனையில் பேறுகாலம் முடிந்து வீட்டிற்கு செல்ல இலவச வாகன வசதி குழந்தை பிறந்து முதல் ஆறுமாதம் வரை பாலூட்டும் தாய்க்கு தேவையான சத்தான உணவு கிடைக்கும் வகையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.
மாவட்ட அளவில் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிப்பெண்களுக்கு மாலையும் வளையலும் அணிவித்து  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் விழா சிறப்புரையில் பேசியதாவது:
       தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி தாய் அன்போடும்ää மனித நேயத்தோடும் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கருவிலே திருவைத் தாங்கிää தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கித் தர இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை சுற்றமும்ää நட்பும் சூழ வாழ்த்தி மகிழும் வளைகாப்புத் திருவிழா தங்களுக்கும் நடக்க வேண்டும் என்பது எல்லா கர்ப்பிணிப் பெண்களின் எதிர்பார்ப்பு ஆகும்ஆனால் இத்தகு விழாவை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதார வசதியற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்களின் உள்ளார்ந்த விருப்பத்தை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் கப்பிணிப் பெண்களுக்காக இத்திட்டத்தை கொண்டு வந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் போதுமான ஊட்டச் சத்துää சுகாதாரம் மற்றும் மன நலத்தைப் பேணிப் பாதுகாக்க நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி 7 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் நிறைவடைந்த கர்ப்பிணிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு 5 வகையான கலவை சாதம் தயாரித்து வழங்கப்படுகிறது. மேலும்ää திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்ää அம்மா குழந்தைகள் நலப்பரிசு பெட்டகம்ää மகப்பேறு சஞ்சீவி திட்டம்ää பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை என எண்ணற்ற பல திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது அறிவு பூர்வமாக குழந்தை வளர்வதற்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. தாய் சேய் நலம் காண நிதியுதவி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெண்களுக்காக அதிகமான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையுரையில் பேசியது:
       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனைää கர்ப்ப காலங்களில் மகப்பேறு நிதியுதவிää மாண்புமிகு முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத்திட்டம் என பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பார்க்கபட்டு வருகிறது. குழந்தைப்பிறந்து 3 முதல் 4 மாதங்கள் வரை முறையாக தடுப்பூசி போட வேண்டும்
       தமிழக அரசு வட்டார அளவில் தொகுதிக்கு ஒரு நிகழ்ச்சி வீதம் சமுh வளைகாப்பு நடத்த கடந்த 2013-ம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2013-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 54 இடங்களில் 5000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு 16 வட்டாரங்களில் 1 நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 56 இடங்களில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ரூ.5 இலட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7ää500க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுh வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
       அதன்படி இந்த ஆண்டு 16 வட்டாரங்களில் 1 நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 108 இடங்களில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ரூ.10 இலட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4320-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது.
       கர்ப்பிணிப் பெண்களுக்கு 7வது மற்றும் 9-வது மாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்றைய தினம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சர்க்கரைப்பொங்கல் தேங்காய் சாதம் புளி சாதம் எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களுக்கும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் அவர்கள் மாலையும் வளையிலும் அணிவித்தார்கள்சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்  மாநகராட்சி மேயர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மஞ்சள் குங்குமம் ஒரு டஜன் வளையல் ப்ளவுஸ் தாம்புல தட்டுடன் சீதனப்பொருட்களை வழங்கினார்கள்.
       ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு 4-வது மாதத்தில் இருந்து சத்துமாவு தொடர்ந்து மருத்துப் பரிசோதனை தடுப்பூசி மற்றும் ஊட்டசத்துடன் உடல்நலக் கல்வியும் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் உடல் எடையை எடுத்து அதற்கேற்றவாறு மருத்துவ ஆலோசனையும் பிரசவகால பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை போன்ற விவரங்கள் அடங்கிய கையேடும் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

       இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் மண்டலக்குழு தலைவர் லதா மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராமு மணிகண்டம் ஒன்றியக்குழு தலைவர் முத்துகருப்பன் மாவட்ட ஆவின் பால் வளத்தலைவர் திரு.எஸ்.எம்.ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் சகாதேவபாண்டியன் விஜி ராஜா பெஸ்ட் பாபு செல்வராஜ் சங்கர் மகாலட்சுமி ஒன்றியக் குழு உறுப்பினர் கண்ணதாசன்ää ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியின் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்  ஸ்ரீரங்கம் வட்டாட்சியர்கள் சண்முகராஜன் ராஜசேகரன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.