Mar 12, 2021

திருச்சி அதிமுகவினருக்கு தேநீர் பரிமாறிய மனிதநேய அமைச்சர்

 திருச்சி

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் தரிசனம் முடித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டீக்கடையில் கட்சிக்காரர்களுக்கு டீ, சாம்பார் விநியோகம் செய்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ர6ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சார வியூகங்கள் பலவிதங்களில் இருக்கும்.


இறுதி எஜமானர்கள் வாக்காளரகள் தான் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இத்தகைய பிரச்சார வியூகங்களை திட்டமிட்டு மேற்கொள்வார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்வது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது போன்ற பல்வேறு யுகத்திகளைக் கையாள்வார்கள்.

சாதாரண பாமர மக்களை கவரும் வகையில் இத்தகைய பிரச்சாரங்கள் அமையும்.

இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டால் வேட்பாளர் சாதாரணமான, எளிமையான நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும்.

இந்த வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் கலந்து கொண்டு விநாயகரை வணங்கிய வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை நுழைவு வாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் டீக்கடைக்கு கட்சியினருடன் டீ குடிக்க சென்றார்.

அவருடன் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் சென்றனர்.

அப்போது டீ கடையில் வேலை செய்யும் மாஸ்டர் டீ போட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி விநியோகம் செய்ய தயாராக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெல்லமண்டி நடராஜன், மாஸ்டரை கீழே இறங்கச் சொல்லிவிட்டுடீ பட்டறையில் ஏறினார்.

கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த டீயை கட்சியினருக்கு விநியோகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து டீக்கடை வாசலில் உள்ள பலகாரக் கடை கல்லா பெட்டியில் ஏறி நின்ற அமைச்சர், கட்சியினர் சாப்பிட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்களுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிட செய்தார்.