Jun 5, 2020

திருச்சி தீயணைப்பு துறையினர் துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

தொடர்ச்சியாக மக்களை பாதுகாக்கும் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

திருச்சி தீயணைப்புத்துறை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறுகையில் ஜீவராசிகளுக்கும் நாங்கள் மனிதநேயத்துடன் உணவு அளித்து வருகிறோம் கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்கள் முதல் தீயணைப்புத்துறையினர் எத்தனையோ மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.



 அதில் சிலர் இறந்தும் உள்ளனர் மேலும் உயிரிழந்த நிலையில் உள்ள பிணங்களை மீட்கும் பொழுது கிணறுகளில் விஷவாயு கசிவு களில் மீட்பு பணியில் ஈடுபடும் போது எங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துதான் நாங்கள் எங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் மேலும் எங்களிடையே மீட்பு பணிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.



 மேலும்தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் வழிகாட்டுதல்படி பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.  இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார் இந்த ஓவிய போட்டிகளில் பல நாட்களாய் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.