Apr 2, 2020

திருச்சி வெளியில் சுற்றுபவர்கள் மீது குற்ற வழக்கு

திருச்சி ஏப் 2

திருச்சி அரசு  மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
நோய் 100ஐ தாண்டியது  - வெளியில் சுற்றி திரிந்தால்  இனி  குற்றவியல் வழக்கு தான் - மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரிக்கை 

திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
3நபர்கள் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் சிகிச்சைபெற்று வந்தனர்
இதில் ஈரோட்டை சேர்ந்த நபருக்கு
கொரோனா வைரஸ்
நோய் உள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 80நபர்களும்
இன்று 27நபர்களும் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் 43நபர்களுக்கு இரத்த மாதிரி
பரிசோதனை
எடுக்கப்பட்டுள்ளது.
இது வரை மொத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
110 நபர்கள்
சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில்
1 நபர் - மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம்
செய்ய வேண்டும். பொதுமக்கள் சிலர்
காய்கறிகள் வாங்க குழந்தைகளுடன் வருவதை தவிர்த்தல் வேண்டும்
2நபர்கள் பயணம்
செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல்
செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  எச்சரித்துள்ளார்.