Oct 2, 2014

ஜெயலலிதா நலமாக உள்ளார்.

சிறையில் ஜெயலலிதா நலமாக உள்ளார்
                           DIG - ஜெய் ஷிம்மா தகவல்

                சிறையில் உள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை சரியாகவே உள்ளது என்றும்,  அவரை 24 மணி நேரமும், மூன்று டாக்டர்களும்,  நான்கு நர்சுகளும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
                மேலும், அவரை சந்திக்க வருபவர்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்தும் கூட அவர் யாரையும் சந்திக்காமல் மறுத்து வருகிறார்.
                தினமும் பழங்கள்,  பிரட் மற்றும் பால் மட்டுமே ஆகாரமாக  எடுத்துக்கொள்கிறார். டாக்டர்களின் அறிவுரையின்படியே அவருக்கு படுக்கை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உணவுகள் கூட டாக்டர்கள் ஆலோசனையின்படியே அளித்து வருவதாகவும், அவர் தற்காலிக குற்றவாளியாக கருதி அவருக்கு கைதியின் உடை கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் DIG - ஜெய் ஷிம்மா.
                இதற்கிடையில், வரும் 7-ஆம் தேதி ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மனுவை ஏற்கனவே இரண்டு முறை விசாரிக்காமலேயே தவிர்த்தது போல, மூன்றாவது முறையும் செய்தால், இதில் நிச்சயம் அரசியல் தலையீடு உள்ளது என்பதில் துளி அளவும் சந்தேகம் இருக்காது.

- டி.எஸ்.ஆர்.சுபாஷ்,

   ஆசிரியர்,
 பத்திரிகையாளர் குரல்.