Jan 2, 2015

உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க சிறப்பு பிரார்த்தனை.இதையொட்டிஅம்மாவின் வேண்டுகோளின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V ஜெயராமன்,மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சி சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்C.மகேந்திரன்,நகர்மன்ற தலைவர் கே.ஜி.எஸ் ஷோபனா
,நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,கூட்டுறவு வீட்டமைப்பு சங்கத்தலைவர் வக்கீல் கண்ணன் ,நகர செயலாளர் கே.ஜி.சண்முகம் ,U .K P ராதாகிருஷ்ணன்,சிதம்பரம் 
,ex கவுன்சிலர்  குருவாயூரப்பன்,சாந்தி,செல்வி,எரிப்பாளையம்  மாலதி நடராஜ், பணியன் துரை ,மணிவண்ணன் ,குமரேசன், பஞ்சலிங்கம் ,வின்சென்ட்,ஊராட்சி மன்றத்தலைவர் தனபாக்கியம் கிட்டு  மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 

Jan 1, 2015

இந்தியாவிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் அம்மா வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு








திருப்பூர், ஜன. 1-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி பேசும்போது கூறியதாவது&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படும் இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது 54 வாக்குறுதிகள் அளித்தார்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார். எத்தணையோ பேர் முதல்வராக பொறுப்பேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அளித்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அம்மா அவர்கள் அளித்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் அம்மா அவர்கள். 
 இன்றைக்கு தமிழக மக்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்க காரணம் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்கள். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி, திருமண உதவியாக 4 கிராம் தங்கம், திருமண உதவி தொகை போன்ற நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார். மேலும் கல்விக்கா அதிக நிதி ஒதுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி தமிழகம் கல்வியில் முன்னேற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.
 மக்கள் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்துக்கும் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். என்றைக்கும் நீங்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 விழாவில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், அன்பகம் திருப்பதி,  கணேஷ், முருகசாமி,சண்முக சுந்தரம்,  சபரி, கனகராஜ், பாலன், ,மற்றும் கருணாகரன், நீதிராஜன், ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Dec 31, 2014

திருப்பூரில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும்  ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர். 
இதே போல் பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேரில் சென்று இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னால் அமைச்சர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்., தாராபுரத்தில் கே,போன்னுசாமி எம்.எல்.ஏ.வும்,காங்கயத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ.,வும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



புத்தாண்டு நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

திருப்பூர்,டிச.31-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆபாமான கலை நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர்சேஷசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் அனைத்து பத்திரிகைகளுக்கும்   அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2014-ம் தேதி இரவில் உள் அரங்கினுள் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஆபாசமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நிகழ்த்த அனுமதியில்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.
அரசு அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் மது வழங்கக்கூடாது. 
தனியார் தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளங்களை 31.12.2014 இரவு 08.00 மணி முதல் 01.01.2015 காலை 06.00 மணி வரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. 
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 01.00 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும்.  
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது, எந்த ஒரு அசம்பாவிதமும் நடவாமல் இருக்கத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்க வேண்டும். 
புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்தும் வசதிகள் செய்திருக்க வேண்டும்.  
நள்ளிரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் சென்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இசைக் கருவிகளையோ ஒலிபெருக்கிகளையோ அதிக ஒலியுடன் பயன்படுத்தக்கூடாது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தக்கூடாது. 
தற்காலிகமாக அமைக்கும் மேடைகளுக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும்;இ தகுதிச்;சான்று பெறப்பட்டிருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட வேண்டும். 
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மேடையில் ஆடுபவர்கள் மேடைகளின் இருந்து யாரும் கீழ் இறங்கி வர அனுமதிக்கக் கூடாது. கீழிருந்து யாரும் மேல் ஏற அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அனைத்தையும் ஊஊவுஏ கேமிராவில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பனிமனையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாம்



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமிட்டு இன்றும்போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசி இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது துணை மேயர் சு.குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பொன்னுசாமி, கண்ணப்பன், ராஜேந்திரன், சரவணன்,ரவிகுமார்,கண்ணபிரான்.ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு





திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ்  துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dec 29, 2014

திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது.








திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது. கட்சியினர் அளித்த மனுக்களை கைத்தறி துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா , வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் பரிசீலனை செய்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி,  துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று கட்சி நிர்வாகிகள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று (சனி ) கட்சி நிர்வாகிகள் விண்ணப்பம் அளித்தனர். திருப்பூர் குலாலர் கல்யாண மண்டபத்தில் ,கொங்கு மெயின் ரோடு பகுதி தேர்தலுக்கு  தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கணேஷ், முருகசாமி உள்ளிட்டோர பங்கேற்றனர். t

Dec 27, 2014

திருப்பூரில் நடந்த அமைப்பு தேத்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தங்கினார்.
மேயர் அ.விசாலாட்சி  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்.ராணுவ கட்டுப்பாட்டுடன் இந்த இயக்கத்தை மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார். அண்ணா திமு.க. இயக்கத்தில் மட்டுமே 1.1/2 கோடி தொண்டர்கள் உள்ளனர் .நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது எந்த விதமான பு கார்களும் இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.மற்ற கட்சியைபோல் இல்லை அண்ணா தி.மு.க. மக்கள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் நாம் என்பதை நிருபிக்கும் வகையில் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.எல்.ஏ, க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.
மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நம் மாவட்ட கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்.. அவரது ஆலோசனையின்படி இந்த தேர்தலை அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். மக்கள் முதல்வர் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்திற்கு நியமிக்கபட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,பொங்கலூர் எஸ்.சிவாச்சலம், அவினாசி மு.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியம் கே.என்.விஜயகுமார், துணை மேயர் சு.குணசேகரன்,வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், அன்னூர் காளியப்பன், அவினாசி ராமசாமி, திருமுருகன் பூண்டி விஸ்வநாதன் உள்ளிட்ட நகர செயலாளர்கள் ஆகியோர்களுக்கு அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் நிர்வாகிகள் பாரங்களை வழங்கினர்.



கூட்டத்தில் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணி, மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், சிராஜ்தீன், வெ.அய்யாசாமி, வி.கே.பி.மணி, அட்லஸ் லோகநாதன், உஷரவிகுமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், அன்னூர் சௌகத் அலி, பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, சேவூர் வேலுசாமி, யு.எஸ்.பழனிசாமி, சில்வர் வெங்கடாச்சலம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கருணாகரன், கண்ணபிரான், பல்லடம் ஜோதிமணி, சித்ராதேவி, வைஸ் பழனிச்சாமி, சித்துராஜ், தர்மராஜன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், வசந்தாமணி, பிரியா சக்திவேல்,பேபி தர்மலிங்கம் நிர்வாகிகள் ராஜ்குமார், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, பரமராஜன் நீதிராஜன் மங்கலம் சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.